Sunday, June 4, 2017

மனிதத் தோல் போர்த்திய மிருகம்

"ஏஷாம்  ந  வித்யா  ந  தபோ  ந  தானம்,
 ஞானம்  ந  ஷீலம்  ந  குணோ  ந  தர்ம;
 தே  மர்த்யலோகே  புவி  பாரபூதா
 மனுஷ்யரூபேண  ம்ருகாஸ்சரந்தி"
என்று  ஒரு  ஸ்லோகம்.
இதன்  விளக்கம் :
     பசுத்தோல்  போர்த்திய  புலியைப்  பற்ரி  நாம்  படித்திருக்கிறோம்.  மனிதத்  தோல்  போர்த்திய  மிருகங்கள்  எவை  என்றும்,  நம்  பெரியோர்களால்  குறிப்பிடப்படிருக்கிறார்கள்.
     படிக்காதவர்கள்,  தியானம்  செய்யாதவர்கள்,  தானம்  கொடுக்காத  கஞ்ச  மகா  பிரபுக்கள்,  நற்குணம்  இல்லாதவர்கள்,  நல்ல  பண்பாடு  இல்லாதவர்கள்,  தார்மீக  வழியில்  நடக்காதவர்கள்  ஆகியோரே  மனிதத்  தோல்  போர்த்திய  மிருகங்கள்  ஆவார்கள்.
-- சித்ரா  நாராயணன்.  ( நல்ல  வார்த்தை  நாலஞ்சு! ).
--  தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஜூன், 3,  2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

No comments: