Friday, June 2, 2017

பூணூல் அணிவதன் நோக்கம்.

  இது  வேதம்  பயிலவும்  வேதநெறி  நிற்பதற்கும்  வழங்கப்படுகின்ற  ஓர்  அதிகார  அடையாளம்.
     இது  பற்றி  இரு  இடங்களில்  திருமூலர்  திருமந்திரத்தில்  சொல்கிறார்:
     பூணூலும்,  குடுமியும்  வேதாந்தைத்தையும்  ஞானத்தையும்  உணர்த்தும்  அடையாளங்களாக,  அந்தணர்களுக்கு  உரியது  என  'அந்தணர்  ஒழுக்கம்'  எனும்  பகுதியிலும்,  6ம்  தந்திரத்தில்  திருநீறு  அதிகாரத்தில்,
    'நூலும்  சிகையும்  உணரார்  நின்  மூடர்கள்
    நூலது  வேதந்தம்  நுண்சிகை  ஞானமாம்'
எனவும்  இதன்  மகத்துவத்தைக்  குறிப்பிடுகிறார்.
-- ( அறிவோம் !  தெளிவோம் ! ).
-- மயிலாடுதுறை  ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்.
--  தினமலர் பக்திமலர்.  15-1- 2015. 

No comments: