Tuesday, June 13, 2017

காட்டிடை ஆடும் கடவுள்!

   திவாலங்காடு  -  ஆலங்காடு,  திருவெண்பாக்கம்  -  இலந்தைக்காடு,  திருவெவ்வூர்  -  ஈக்காடு,  திருப்பாசூர்  -  மூங்கிற்காடு,
திருவிற்கோலம்  -  தர்ப்பைக்காடு.
-- ஆர்.கே.லிங்கேசன்,  மேலகிருஷணன்புதூர்.
கீதையின்  சாரம்!
     சுவாமி  சிவானந்தரிடம்  ஒருவர்,  "கீதையின்  சாரம்  என்ன?"  என்று  கேட்டார்.
     அதற்கு  சிவானந்தர், "அன்பி  செய்,  சேவை  செய்,  பிறருக்கு  வழங்கு  என்ற  மூன்று  சொற்கள்தான்  கீதையின்  சாரம்! "  என்றார்.
-- எஸ்.ராஜகுமார், போரூர்.
இரட்டைப்  பார்வை  நந்தி!
     நாகை  நீலாயதாட்சி  ஆலயத்தில்  நந்தி தன்  இடது  கண்ணால்  சிவனையும்,  வலது  கண்ணால்  அம்பிகையையும்  தரிசித்தபடி  காட்சியளிக்கிறார்.  இதனால்  இவர்  'இரட்டைப்  பார்வை  நந்தி' என்றே  அழைக்கப்படுகிறார்.
-- நெ.இராமன், சென்னை.
கிரீடத்திற்கு  பதில்!
     பண்டரிபுரத்தில்  அபிஷேக  நேரத்தில்  பண்டரிநாதன்  தலையில்  பாணலிங்கம்  உள்ளதை  தரிசிக்கலாம்.  நரஹரி  என்ற  பக்தருக்காக  பாண்டுரங்கன்  கிரீடத்துக்கு  பதில்  பாணலிங்கத்தோடு  காட்சி  தந்ததாக  வரலாறு  கூறுகிறது.
-- ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  29-1-2015.     

No comments: