Sunday, June 25, 2017

5ன் மடங்குகள் ஈசி பெருக்கல்

உதாரணம் :
(1)  125ஐ  93 ஆல்  பெருக்கலாம்.  ( 125  பெருக்கல்  93 =  11625 )
       *  93  உடன்  மூன்று  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  93000.
       *  கிடைத்த  விடையை  8  ஆல்  வகுக்கவும்  93000 / 8  =  11625.
(2)  125ஐ  137 ஆல்  பெருக்கலாம். ( 125  பெருக்கல்  137  =  17125 ).
       *  137  உடன்  மூன்று  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  137000.
       *   கிடைத்த  விடையை  8  ஆல்  வகுக்கவும்  137000 /  8  =  17125.
           அடுத்ததாக  25ஐ  வைத்து  பெருக்குவோம்.
உதாரணம் :
(1)  25 ஐ  67  ஆல்  பெருக்கலாம்.  ( 25  பெருக்கல் 67  =  1675 ).
       *  67  உடன்  இரண்டு  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  6700.
       *  கிடைத்த  விடையை  4  ஆல்  வகுக்கவும்  6700 /  4  =  1675.
(2 )  25 ஐ  376  ஆல்  பெருக்கலாம்.  ( 25  பெருக்கல்  376  =  9400 ).
       * 376  உடன்  இரண்டு  பூஜ்ஜியங்களை  சேர்ப்போம்  37600.
       *  கிடைத்த  விடையை  4  ஆல்  வகுக்கவும்  37600 /  4 =  9400. 

Saturday, June 24, 2017

டிடிஎச் சேவை பிடிக்கலையா?

வந்தாச்சு  புது  வசதி.
     மிகவும்  போட்டி  நிறைந்த  வர்த்தக  சந்தையாக  டிடிஎச்  சேவையும்  உருவாகிவருகிறது.  டிஷ்  டிவி,  ஏர்டெல்,  ரிலையன்ஸ்,  டாடா  ஸ்கை  என  பல  நிறுவனங்கள்  டிடிஎச்  சேவையை  வழங்கிவருகின்றன.
     ஒரு  டிடிஎச்சை  வாங்கும்  வாடிக்கையாளர்கள்  மற்றொரு  டிடிஎச்  சேவை  பெற  இப்போது  வசதி  இல்லை.  முற்றிலுமாக  புதிய  சாதனங்களை  வாங்கி  பொருத்தினால்  மட்டுமே  அதன்  சேவையை  பெற  முடியும்.  ஆனால்,  விரைவில்  இதர்கு  தீர்வு  ஏற்பட  உள்ளது.
     டிடிஎச்  சேவை  வழங்கும்  நிறுவனத்தை  மாற்றிக்  கொள்ளும்  வகையில்  புதிய  கருவியை  அறிமுகப்படுத்த  ஹாங்காங்கை  சேர்ந்த  ஸ்மிட்  கார்ப்பரேஷன்  நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.  கார்டு  போன்ற  இந்த  சாதனத்தை  செட்  டாப்  பாக்ஸில்  பொருத்தி,  வேறு  டிடிஎச்  சேவைக்கு  மாற்ற  முடியும்  என  தெரிகிறது.  இது  தொடர்பாக  கட்டுப்பாட்டு  அமைப்பான  டிராயுடன்  பேசி  வருவதாகவும்  தகவல்  வெளியகி  உள்ளது.  கண்டிஷனல்  அக்சஸ்  மாடுயூல்  ( கேம் )  என்ற  கார்டு  போன்ற  சாதனத்தை  பாக்ஸில்  பொருத்திக்  கொள்ளலாம்.  இதனை  பயன்படுத்தி,  வேறு  சேவைக்கு  மாற  முடியும்.  மெலும்  செட்டாப்  பாக்ஸ்  இன்றி  டிவி  பார்க்க  வசதியாகவும்  ஒரு  சிப்பை  அறிமுகப்படுத்த  திட்டமிட்டுள்ளோம்.  ஆனால்  அதற்கு  அந்த  குறிப்பிட்ட  டிவியில்  டிஜிட்டல்  டியூனர்  ஏற்கனவே  பொருத்தப்பட்டிருக்க  வேண்டும்.
     ஏற்கனவே  இந்த  கார்டு  பொருத்தும்  வசதியை  டிஷ்  டிவி  அறிமுகப்படுத்தியது.  எனினும்  இதற்கு  நம்நாட்டில்  போதிய  வரவேற்பு  கிடைக்கவில்லை.  ஆனால்  தற்போது  ஒரு  பொது  நிறுவனம்  இத்தகைய  கார்டை  அறிமுகப்படுத்த  உள்ளதால்,  டிராய்  அதை  அனுமதிக்கும்  பட்சத்தில்,  சந்தையில்  நல்ல  வரவேற்பு  கிடைக்கும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.  இது  தொடர்பாக  ஸ்மிட்  நிறுவனம்  சில  டிடிஎச்  நிறுவனங்களுடன்  பேசி  வருவதாகவும்  கூறப்படுகிறது.
--   தினமலர்  திருச்சி 7 -2 -2013. 

Friday, June 23, 2017

புத்தபிட்சு உடல்

200  ஆண்டுகளுக்கு  முந்தைய  'மம்மியி'யில்,   பத்மாசனத்தில்  புத்தபிட்சு  உடல்.
     மங்கோலியாவின்  சங்கிங்  கோகையர்கான்  மாநிலத்தில்  தொல்பொருள்  துறை  ஆய்வாளர்கள்  நடத்திய  ஆய்வின்  போது  200  ஆண்டுகளுக்கு  முந்தைய  முதுமக்கள்  தாழி  ( மம்மி )  கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அதில் பத்மாசனத்தில்  அமர்ந்த  நிலையில்  அடக்கம்  செய்யப்பட்ட  புத்தபிட்சுவின்  உடல்  தோண்டி  எடுக்கப்பட்டுள்ளது.
      திபெத்  புத்த  பிட்சுக்களிடம்  இதுபோல்  தியான  நிலையில்  உயிர்விடும்  பழக்கம்  இருந்து  வந்ததால்,  இந்த பிட்சுவும்  திபெத்திய  லாமாவின்  சீடராக  இருக்கலாம்  என்று  கூறப்படுகிறது.  கால்நடையின்  தோலால்  சுற்றி  பதப்படுத்தப்பட்டிரிந்த  புத்த  பிட்சு  உடலில்  உண்மையான  வயதை  கண்டுபிடிக்கும்  ஆய்வில்  ஆய்வாளர்கள்  ஈடுபட்டுள்ளனர்.
--    தினமலர்  திருச்சி 29 -1 -2015.      

Thursday, June 22, 2017

சனியை போன்று புதிய கிரகம்

  சூரிய  குடும்பத்தில்  இருந்து  420  ஒளி  ஆண்டு  தொலைவுக்கு  அப்பால்  வளையத்துடன்  கூடிய  புதிய  கிரகத்தை  விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர்.
     ஜே147பி  என்று  பெயரிடப்பட்டுள்ள  அந்த  கிரகம்  சனி  கிரகத்தின்  வளையத்தைவிட  200  மடங்கு  பெரியது  என்று  விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.
     இந்த  கிரகத்தை  பற்றி  லெய்டன்  வானியல்  ஆய்வு  மையத்தின்  விஞ்ஞானி  மேத்திவ்  கென்வோர்த்  கூறுகையில்,  'ஜே147பி  கிரகம்  பூமியை  விட  10  மடங்கு  அதிக  எடை  கொண்டதாக  இருக்கும்  என்று  தெரிவித்தார்.
--   தினமலர்  திருச்சி 29 -1 -2015. 

Wednesday, June 21, 2017

பார்க்கிங் பிரச்னை.

  பார்க்கிங்  பிரச்னைக்கு  தீர்வு  காணும்  வகையில்  ஒருநபர்  செல்லும்  காரை  ஹூண்டாய்  நிறுவனம்  உருவாக்கி  உள்ளது.
பார்ப்பதற்கு  பெரிய  சைஸ்  முட்டையைபோல  காட்சியளிக்கும்  இந்த  காரில்  ஒருவர்  மட்டுமே  பயணிக்க  முடியும்.  இ4யு  என்று  பெயரிடப்பட்டுள்ள  இந்த  கார்,  எலக்ட்ரிக்  பேட்டரியில்  இயங்கக்கூடியது.  மிகவும்  பார்க்கிங்  நெருக்கடி  மிகுந்த  நகர்புறங்களில்  பயனுள்ளதாக  இருக்கும்  வகையில்  இந்த  முட்டை  கார்  வடிவமைக்கப்பட்டுள்ளது.
     இந்த  கார்   24  வோல்ட்  500  வாட்  பாட்டரியில்  இயங்குகிறது.  மணிக்கு  அதிகபட்சமாக  28  கி.மீ  வேகத்தில்  செல்ல  முடியும்.  பின்புற  கரங்களை  மடக்கி  வைக்க  முடியும்  என்பதால்  இந்த  முட்டை  வடிவ  காரை  நிறுத்த  இட  தேவை  மிகவும்  குறைவு.  இந்த  வாகனத்தின்  மேற்புறம்  ஒரு  பெரிய  சைஸ்  ஹெல்மட்டை  போலவே  உள்ளது.
     தெங்கொரியாவில்  உள்ள  கோயாங்  நகரில்  நடந்த  சியோல்  வாகன  கண்காட்சியில்  இந்த  முட்டை  வடிவ  காரை  ஹூண்டாய்  நிறுவனம்  அறிமுகப்படுத்தியது.
--   தினமலர்  திருச்சி 8 -4 -2013.  

Tuesday, June 20, 2017

விண்கல்

விண்கல்  பிடித்து  இழுத்து  வந்து  சந்திரன்  அருகே  நிறுத்த  திட்டம்.
'நாசா'  தீவிரம்
     விண்வெளியில்  பல  சிறிய  மற்றும்  பிரம்மாண்டமான  விண்கற்கள்  சுற்றி  வருகின்றன.  சில  நேரங்களில்  பூமிக்கு  நெருக்கமாக  விண்கல்  வரும்போது,  பூமியில்  அந்த  விண்கல்  மோதுமோ  என்ற  அச்சம்  ஏற்படுக்கிறது.  இதுபோன்ற  பூமியை  நெருங்கி  வரும்  விண்கற்களை  அமெரிக்க  விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனம்  'நாசா'  கண்காணித்து  வருகிறது.
     ஒரு  விண்கல்லில்  விண்வெளி  வீரர்களை  இறக்கி  ஆராய்ச்சி  செய்ய  நாசா  திட்டமிட்டது.  இதற்கு  பல  ஆண்டுகள்  ஆகலாம்.  எனவே,  ரோபா  விண்கலம்  அனுப்பி,  விண்வெளியில்  இருந்து  ஒரு  சிறிய  விண்கல்லை  பிடித்து  இழுத்து  வந்து,  சந்திரன்  அருகே  நிலைநிறுத்த  திட்டம்  வகுக்கப்பட்டுள்ளது.
      முதலில்  500  டன்  எடையும்,  25  அடி  குறுக்களவும்  கொண்ட  ஒரு  சிறிய  விண்கல்  தேடிக்  கண்டுபிடிக்கப்படும்.  பின்னர்,  2019ம்  ஆண்டுக்குள்  ரோபா  விண்கலம்  அனுப்பி,  அந்த  விண்கல்  இழுத்து  வரப்பட்டு,  சந்திரன்  அருகே  நிலைநிறுத்தப்படும்.
      இதைத்தொடர்ந்து,  இப்போது  உருவாக்கப்பட்டு  வரும்  ஒரியான்  விண்கலத்தில்  4  விண்வெளி  வீரர்கள் 2021ம்  ஆண்டு  சென்று  விண்கல்லை  சுற்றி  விண்வெளியில்  நடந்து  ஆராய்ச்சி  செய்வார்கள்.  எதிர்காலத்தில்  விண்கல்  மற்றும்  செவ்வாய்  கிரகத்துக்கு  மனிதர்களை  அனுப்பும்  திட்டங்களுக்கு  இந்த  ஆராய்ச்சி  உதவியாக  இருக்கும்.
     விண்வெளியில்  உலாவும்  ஆயிரக்கணக்கான  விண்கற்களில்,  பூமியை  நெருங்கி  வரும்  சரியான  விண்கல்லை  சரியான  நேரத்தில்  கண்டுபிடிப்பது  கடினம்  ஆகும்.  சரியான  விண்கல்  கண்டுபிடிக்கப்பட்டால்,  இழுவைக்  கயிறு  இணைக்கப்பட்ட  வலைப்பை  போன்ற  ரோபோ  விண்கலம்  அனுப்பிவைக்கப்படும்.  வலைப்பையில்  விண்கல்லை  மாட்டி,  ரோபோ  விண்கலம்  இழுத்து  வரும்.  அதை  எங்கு  வேண்டுமானாலும்  நிலை  நிறுத்தலாம்.
     சிறிய  விண்கல்  என்பதால்,  பூமிக்கு  ஆபத்து  ஏற்படாது.  நிறுத்தப்பட்ட  இடத்தில்  இருந்து  விண்கல்  நழுவி  பூமியை  நோக்கி  வந்தால்,  காற்று  மண்டலத்தில்  நுழைந்ததும்  அது  எரிந்து  சாம்பலாகி  விடும்.
--  தினமலர்  திருச்சி 8 -4 -2013.  

Monday, June 19, 2017

எஸ்எம்எஸ் மூலம் செல்போன் சார்ஜ்.

  மின்  இணைப்பு  இல்லாத  கிராமங்களில்  செல்போன்  சார்ஜ்  தீர்ந்துவிட்டால், எஸ்எம்எஸ்  மூலம்  இயங்கும்  சூரிய  ஒளியில்  தயாரிக்கப்பட்ட  மின்சாரத்தை  கொண்டு  செல்போனை  சார்ஜ்  செய்யும்  மையங்களை  இங்கிலாந்தைச்  சேர்ந்த  'புபல்லோ  கிரிட்'  நிறுவனம்  வடிவமைத்துள்ளது.
     மின்  இணைப்பு  இல்லாத  கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள  செல்போன்  சார்ஜ்  மையத்தில்  உள்ள  பேட்டரி,  சூரிய  ஒளியில்  இருந்து  மின்சாரம்  தயாரிக்கும்  பேனலுடன்  இணைக்கப்பட்டிருக்கும்.  சூரிய  ஒளியின்  அளவு  மற்றும்  வெப்பத்தின்  அளவை  பொருத்து  உற்பத்தியாகும்  மின்சாரம்,  பேனலுடன்  இணைக்கப்பட்ட  பேட்டரியில்  சேமிக்கப்படும்.  இப்படி  ஒரு  முறை,  பேட்டரியின்  முழு  அளவுக்கு  மின்சாரம்  உற்பத்தி  செய்யப்பட்டு  சேமிக்கப்பட்டால்  அதிலிருந்து  3  நாட்களுக்கு  செல்போன்களை  சார்ஜ்  செய்து  கொள்ள  முடியும்.
     அந்த  பேட்டரியுடன்  செல்போனை  சார்ஜ்  செய்யும்  'சாக்கெட்'  இணைக்கப்பட்டிருக்கும்.  சார்ஜ்  செய்ய  வேண்டிய  செல்போனில்  இருந்து  அந்த  நிறுவனம்  அறிவித்துள்ள  முறையில்  ஒரு  எஸ்எம்எஸ்  அனுப்பினால்,  சாக்கெட்டின்  மேல்புறத்தில்  இருக்கும்  எல்.ஈ.டி. லைட்  எரியும்.  இதையடுத்து  அந்த  சாக்கெட்டில்  நமது  செல்போனை  பொருத்தி  சார்ஜ்  செய்துகொள்ளலாம்.
     சார்ஜ்  செய்வதற்காக  நமது  செல்போனில்  இருந்து  எஸ்எம்எஸ்  அனுப்பியதும்,  ஒரு  குறிப்பிட்ட  தொகை  நமது  போனில்  உள்ள  டாக்  வெல்யூவில்  இருந்து  கட்டணமாக  கழிக்கப்படும்.  ஒரு  போனில்  இருந்து  ஒரு  முறை  எஸ்எம்எஸ்  அனுப்பினால்,  அந்த  போனை  ஒன்றரை  மணி  நேரம்  வரை  சார்ஜ்  செய்து  கொள்ளலாம்.
     செல்போன்  சார்ஜ்  செய்யும்  மையத்தில்  உள்ள  டவரில்   10  சார்ஜ்  பாயின்ட்கள்  பொருத்தப்பட்டிருக்கும்.  அதில்  இரு  நாளைக்கு  30ல்  இருந்து  50  செல்போன்கள்  வரை  சார்ஜ்  செய்யலாம்.
-- தினமலர்  திருச்சி  12-3-2013.        

Sunday, June 18, 2017

தமிழ் ஆண்டுகள் அறுபது

 தமிழ்  ஆண்டுகள்  அறுபது பெயர்களால்  அமைகின்றன.  'பிரபவ'  என்பது  முதல்  ஆண்டின்  பெயர்.  அக்ஷய  என்பது  அறுபதாவது  ஆண்டு  பெயர்.  மேலும்,  வளருவது  என்பது  இதன்  பொருள்.  இவற்றுள்  முதல்  இருபது  'உத்தமம்'  எனவும்,  இடையில்  இருபது  'மத்தியம்'  என்றும்,  இறுதி  இருபது  'அதமம்'  என்றும்  பிரிக்கப்படும்.  ஒவ்வொரு  ஆண்டுக்கும்  உரிய  பலங்களைச்  சொல்லும்  வெண்பாக்களும்  உண்டு.
-- புலவர் . வே. மகாதேவன்.
-- தினமலர்,  தமிழ்ப்  புத்தாண்டு  சிறப்பு மலர்.  14-4-2013.  

Saturday, June 17, 2017

வெளிநாட்டுக் கோயில்கள்

மலேஷியா  பத்துமலை  முருகன்  கோயில்!
     உலகிலேயே  மிக  உயரமான  முருகன்  சிலை ( 140  அடி )  மலேஷியாவின்  தலைநகர்  கோலாலம்பூரிலிருந்து  13 கி.மீ தூரத்தில்  பத்துமலை  என்ற  இடத்தில்  உள்ளது.
     திருவாரூரைச்   சேர்ந்த  சிற்பி  தியாகராசன்  மற்றும்  14  உதவியாளர்களுடன்  3  ஆண்டு  கடின  உழைப்பில்  உருவானது  இந்த  முருகன்  சிலை.  மலேஷியாவின்  கின்னஸ்  புத்தகத்தில்  இச்சிலைப்  பற்றிய  விவரங்கள்  இடம்பெற்றுள்ளன.
     29-1-2006ம்  ஆண்டு  சிலை  திறப்பு  நடைபெற்றது.  தரையில்  இருந்து  400  அடி  உயரத்தில்  குகையில்  அமைந்திருக்கும்  முருகனை  தரிசிக்க  272  படிக்கட்டுகள்  ஏறிச்  செல்ல  வேண்டும்.  குகையில்  வேலாயுதம்  கோயிலும்  அலுவலகமும்  உள்ளது.
கோயில்  வரலாறு :
     தமிழகத்தில்  திருமலைராயன்  பட்டினம்  ஊரைச்  சேர்ந்த  தம்புசாமி  பிள்ளை,  கந்தப்பத்தேவர்  துணையுடன்  குகைக்  கோயிலில்  முதலில்  வேல்  மட்டும்  நட்டு  வணங்க  தொடங்கினார்கள்.
     மலைமேல்  தமிழ்க்கடவுள்  முருகனின்  வேல்  இருப்பதை  அறிந்த  பக்தர்கள்  கஷ்டப்பட்டு  மலையேறி  'வேல்'  வழிபாடு  செய்து  மகிழ்ந்தனர்.  அப்போது  அவ்வேலை  அகற்ற  கோலாலம்பூர்  ஆட்சியர்  ஜோஸ்துரை  முனைந்தார்.  அதை  பக்தர்கள்  எதிர்த்தனர்.  எனவே  வழக்குப்  பதிவு  செய்யப்பட ,  இறுதியில்,  முருகபக்தர்களுக்கு  ஆதரவாக  தீர்ப்பு  வந்தது.
     அதன்பின்  1891ம்  ஆண்டு  திராவிடக்  கட்டடக்  கலையின்  அமைப்பில்  கோயில்  கட்டப்பட்டது.  1892ம்  ஆண்டில்  இருந்து  தை  பூச  விழா  இங்கு  கொண்டாடப்பட்டு  வருகிறது.
     1920ம்  ஆண்டு  மலைமேல்  செல்லவும்,  கீழே  இறங்கவும்  படிக்கட்டுகள்  அமைக்கப்பட்டன.  1939ல்  அதனருகிலேயே  இன்னொரு  படிக்கட்டு  வரிசையும்,  1975ல்  மூன்றாவது  படிக்கட்டுகளும்  கட்டப்பட்டன.  பின்னர்  கோயிலுக்கு  வெள்ளி  ரதம்  உருவானது.
     பத்துமலை  அடிவாரத்தில்  50  அடி  அனுமன்  சிலை,  விநாயகர்  கோயில்,  வள்ளி,  தெய்வானையுடன்  கூடிய  சுப்ரமண்யர்  கோயில்  உண்டு.  அங்குள்ள  கலைக்கூடத்தில்  1330  திருக்குறள்  மற்றும்  அவ்வையார்,  திருவள்ளுவர்,  வள்ளலார்,  காந்தி,  நாயன்மார்கள்,  ராமாயண  சிற்பங்கள்  இருக்கின்றன.
     பத்துமலை  முருகனுக்கு  இந்துக்கள்  மட்டுமல்ல,  சீனர்களும்  மற்ற  மதத்தவரும்  ஈடுபாடுகொண்டு  விரதம்  இருந்து  நேர்த்திக்கடன்  செலுத்துகின்றனர்.
-- ந.சண்முகம்,  திருவண்ணாமலை.
-- தினமலர்  பக்திமலர்.  11-12-2014.      

Friday, June 16, 2017

பொருட்களின் விலையை போனில் பார்க்க

 சில  பொருட்களில்  அதன்  விவரங்களை  பார்கோடுகளில்  எழுதியிருப்பார்கள்.  அதை  நாம்  சாதாரணமாக  புரிந்து  கொள்ள  முடியாது.  இதற்கு  தீர்வாக  இருக்கிறது  இந்த  குட்டி  கருவி.  கடைகளில்  பொருட்களை  வாங்குகிறோம்  அல்லது  அந்த  பொருட்களைக்  குறித்த  விவரம்  அறிந்து  கொண்டு  வாங்க  வேண்டும்  என்றால்,  இந்த  கருவியைக்  கொண்டு  பார்  கோடை  ஸ்கேன்  செய்தால்  போதும்.  நமது  ஸ்மார்ட்  போனுடன்  இணைக்கப்பட்டிருப்பதால்  அனைத்து  விவரங்களும்  ஸ்மார்ட்  போனுக்கு  வந்துவிடும்.  பிறகு  தேவையெனில்  வாங்கிக்கொள்ளலாம்.
எக்கோ  ஏடிஎம்
     வங்கி  கணக்கிலிருந்து  பணம்  எடுக்க  ஏடிஎம்  பயன்படுத்துவோம்.  ஆனால்  ஏதாவது  பொருட்களை  விற்று  பணம்  வாங்க  வேண்டும்  என்றால்  வங்கி  அல்லது  அடகு  கடைகள்தான்  நமது  தேர்வாக  இருக்கும்.  ஆனால்  இதற்கும்  ஒரு  இயந்திரம்  வந்துவிட்டது.  கையில்  செல்போன்தான்  இருக்கிறது.  அதை  வைத்து  பணம்  வாங்க  வேண்டும்  என்றால்  இந்த  இயந்திரத்தில்  வைத்துவிட்டால்  போதும்.  இந்த  பொருளுக்கு  இவ்வளவு  கிடைக்கும்  வாங்கிக்  கொள்கிறீர்களா  என  கேட்கிறது.  ஓகே  என்றால்  போனை  எடுத்துக்  கொண்டு  பணம்  கொடுத்துவிடுகிறது.  இனி  பொருட்களை  விற்க  அடகு  கடைக்கு  அலைய  வேண்டிய  தேவையில்லை.
--  - வணிக வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள்,  ஜனவரி  26, 2015.     

Thursday, June 15, 2017

தொழில் நுட்பம்

தொடாமல்  தொழில்  நுட்பம்
     தொடுதிரை  ஆதிக்கத்தின்  அடுத்த  தலைமுறை  தொழில்  நுட்பமாக  உருவாகியுள்ளது  இந்த  கார்  தொழில்  நுட்பம்.  வாகன  ஓட்டுபவருக்கு  எதிரே  உள்ள  மானிட்டரை  தொடாமலேயே  அதில்  உள்ள  வசதிகளை  இயக்கலாம்.  உடல்  அசைவுகள்  மூலம்  நமது  கட்டளைகளை  இது  எடுத்துக்  கொள்ளும்.
ஒயர்  இல்லாமல்  சார்ஜர்
     ஒயர்கள்  இல்லாமல்  செல்போன்  சார்ஜ்  செய்வதற்கான  தொழில்  நுட்பத்திற்கு  முக்கியத்துவம்  கொடுத்து  வருகிறது  டெக்  உலகம்.  செல்போன்  பின்புறம்  உட்பக்கமாக  சிறு  கருவி  பொருத்தப்படுகிறது.  நாம்  போனை  கீழே  வைப்பதுபோல  சார்ஜர்  படுக்கையில்  போனை  வைத்து  விட்டால்  சார்ஜ்  ஏறிவிடும்.
கார்  கீ  வாட்ச்
     கை  கடிகாரத்தை  போல  கையில்  அணிந்து  கொள்ளும்  கண்ட்ரோல்  சாதனத்தின்  மூலம்  காரின்  கதவை  திறப்பது,  மூடுவதும்  இஞ்சின்  ஸ்டார்ட்  செய்வது,  ஏசி கண்ட்ரோல்  உட்பட  பல  வேலைகளை  செய்ய  முடியும்.  கார்  எந்த  பாதையில்  செல்ல  வேண்டும்  என்பதையும்  இதன்  மூலம்  கண்காணிக்கலாம்.
-- வணிக வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள்,  ஜனவரி  26, 2015. 

Wednesday, June 14, 2017

'நாதஸ்வர இசைக் கருவி'

   நாதஸ்வரத்தின்  நீளம்  பலவாறாக  இருக்கும்.  மிகப்  பழங்காலத்தில்  18.25  அங்குல  நீளமாக  இருக்கும் ( சுருதி 4.5 கட்டை ).
பல  மாறுதல்களுக்குப்  பின்  1941-ம்  ஆண்டு  திருவாவடுதுறை  டி.என்.ராஜரெத்தினம்  பிள்ளை  பல  முயற்சிகள்  செய்து  34.5  அங்குல  நீளமும்  2  கட்டை  சுருதியும்  கொண்ட   நாதஸ்வரத்தைக்  கொண்டுவந்தார்.  இதைப்  பாரி   நாதஸ்வரம்  என்பர்.  நீளம்  குறைந்த   நாதஸ்வரம்  திமிரி  எனப்படும்.  நீளம்  குறைந்தால்  ஒலி  உரத்து  எழும்.  சுருதி  அதிகம்.
    'இராஜவாத்தியம்'  என்று  சிறப்பிக்கப்பட்டுள்ள  இதை   நாதஸ்வரம்,  நாகசுரம்,  நாதசுரம்,  நாகஸ்வரம்,  நாயனம்  என்று  பலவாறு  அழிக்கப்படுவது  உண்டு.  இக்கருவி  பொதுவாக  ஆச்சா  மரத்தினால்  நரசிங்கன்பேட்டை ,  தேரழுந்தூர்,  வாஞ்சூர்,  திவானைக்காவல்  போன்ற  ஊர்களில்  அதற்கெனவுள்ள  ஆச்சாரிகளால்  மிகவும்  சிறப்பாகச்  செய்யப்படுகிறது.  அபூர்வமாக  வெள்ளி,  தங்கத்தினாலும்  இக்கருவி  செய்யப்பட்டது.  ஆண்டாங்கோவில்  வீராசாமி  பிள்ளை  பொன்னால்  ஆன   நாதஸ்வரம்  வைத்திருந்தார்.  ஆழ்வார்திருநகரி,  திருவாரூர்,  கும்பகோணம்,  கும்பேஸ்வரர்  கோயில்களில்  கருங்கல்லில்  செய்யப்பட்ட   நாதஸ்வரங்கள்  வாசிக்கப்படுகின்றன.
      நாதஸ்வரத்தில்  காற்றை  உட்செலுத்தி  ஊதுவதற்கு  உதவுவது  'சீவாளி' ( ஜீவஒலி).  காவிருக்  கரையில்  விளையும்  கொருக்கள்  புல்லை  வெட்டியெடுத்து  நிழலில்,  பனியில்,  இளஞ்சூரிய  வெயிலில்  என  15. 15 நாட்கள்  காயவைத்து,  வெட்டி  சிறு  துண்டுகளாக்கி  நெல்  மற்றும்  மாமிசத்தோடு  சேர்த்து  வேகவைத்து  ஆறு  மாதம்  பதப்படுத்தி  உருவாக்குவார்களாம்.
திருவாவடுதுறை,  திருவீழிமிழலை,  திருவிடைமருதூர்  போன்ற  ஊர்களில்  சீவாளி  செய்யப்படுகின்றன.
--  கல்கி.  10- ஆகஸ்ட்  2014.
-- இதழ்  உதவி:  செல்லூர் கண்ணன். 

Tuesday, June 13, 2017

காட்டிடை ஆடும் கடவுள்!

   திவாலங்காடு  -  ஆலங்காடு,  திருவெண்பாக்கம்  -  இலந்தைக்காடு,  திருவெவ்வூர்  -  ஈக்காடு,  திருப்பாசூர்  -  மூங்கிற்காடு,
திருவிற்கோலம்  -  தர்ப்பைக்காடு.
-- ஆர்.கே.லிங்கேசன்,  மேலகிருஷணன்புதூர்.
கீதையின்  சாரம்!
     சுவாமி  சிவானந்தரிடம்  ஒருவர்,  "கீதையின்  சாரம்  என்ன?"  என்று  கேட்டார்.
     அதற்கு  சிவானந்தர், "அன்பி  செய்,  சேவை  செய்,  பிறருக்கு  வழங்கு  என்ற  மூன்று  சொற்கள்தான்  கீதையின்  சாரம்! "  என்றார்.
-- எஸ்.ராஜகுமார், போரூர்.
இரட்டைப்  பார்வை  நந்தி!
     நாகை  நீலாயதாட்சி  ஆலயத்தில்  நந்தி தன்  இடது  கண்ணால்  சிவனையும்,  வலது  கண்ணால்  அம்பிகையையும்  தரிசித்தபடி  காட்சியளிக்கிறார்.  இதனால்  இவர்  'இரட்டைப்  பார்வை  நந்தி' என்றே  அழைக்கப்படுகிறார்.
-- நெ.இராமன், சென்னை.
கிரீடத்திற்கு  பதில்!
     பண்டரிபுரத்தில்  அபிஷேக  நேரத்தில்  பண்டரிநாதன்  தலையில்  பாணலிங்கம்  உள்ளதை  தரிசிக்கலாம்.  நரஹரி  என்ற  பக்தருக்காக  பாண்டுரங்கன்  கிரீடத்துக்கு  பதில்  பாணலிங்கத்தோடு  காட்சி  தந்ததாக  வரலாறு  கூறுகிறது.
-- ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  29-1-2015.     

Monday, June 12, 2017

இது 'கரடி விடுறது' இல்லே !

*   சைபீரியர்கள்  கரடிகளைத்  தங்கள்  முன்னோர்களாக  வணங்குகின்றனர்.
*   பின்லாந்தின்  தேசிய  விலங்கு  கரடி.
*   கருப்புக்   கரடிகள்  அற்புதமாக  மரம்  ஏறும்,  அழகாக  நீச்சலடிக்கும்.
*    கரடிகளுக்கு  மோப்பச்  சக்தி  அதிகம்.  ஒரு  இடத்தில்  மனிதன்  கடந்து  சென்ற  14  மணி  நேரத்துக்குப்  பிறகும்
     கண்டுபிடிக்கும்.  சுமார்  64  கிலோ  மீட்டர்  தூரத்தில்  இருக்கும்  உணவையும்   கரடிகள்  கண்டுபிடித்து  விடும்.
*   குகைகளில்  இருக்கும்போது   கரடிகள்  நீர்  குடிக்காது.  உணவு  உட்கொள்ளாது,  மலம்  மற்றும்  சிறுநீர்  கழிக்காது.
*    கரடிகளின்  பாதம்  மிக  வலுவானது;  எதையும்  எளிதாக  உடைத்து  விடும்.
*    கரடிகள்  வட அமெரிக்கா,  தென் அமெரிக்கா,  ஐரோப்பா  மற்றும்  ஆசியாவில்  காணப்படும்.
*   பத்துக்கும்  மேற்பட்ட  கரடி  இனங்கள்  உண்டு.
-- கல்கி.  10- ஆகஸ்ட்  2014.
-- இதழ்  உதவி:  செல்லூர் கண்ணன். 

Sunday, June 11, 2017

பூஜை, ஜபம், தியானம்!

     பகவான்  ரமணரை  சந்தித்த  பக்தர்  ஒருவர், "பகவானே!  பூஜை,  ஜபம்,  தியானம்  இவற்றின்  தன்மைகளைப்  பற்றிக்  கூறுங்கள்!"  என்று  கேட்டார்.
    "உடல்,  வாக்கு,  மனம்  என்ற  மூன்றும்  பங்கு  பெறுவது  பூகை.  வாக்கும்,  மனமும்  மட்டும்  ஈடுபடுவது  ஜபம்.  கடைசியில்  மனம்  மட்டும்  தனித்து  இயங்கி  நிற்பதே  தியானம்"  என்றார்  ரமணர்.
-- டி.பூபதிராவ்,  காஞ்சிபுரம்.
மும்மூர்த்திகளும்  லிங்க  வடிவில்!
     திருவானைக்காவல்  அகிலாண்டேஸ்வரி  கோயில்  ஆயிரங்கால்  மண்டபத்துக்கு  எதிரே  திரிமூர்த்தி  கோயில்  உள்ளது.  இங்கு  மும்மூர்த்திகளும்  லிங்க  வடிவில்  காட்சி  தருகின்றனர்.
-- மல்லிகா  அன்பழகன்,  சென்னை- 78.
உப  வேதங்கள்
     வேதங்கள்  நான்கு  என்று  கேள்விப்பட்டிருக்கிறோம்.  அவை  தவிர  நான்கு  உபவேதங்கள்  இருக்கின்றன.  அவை :
1.   ஆயுர்வேதம்:  உடலை  நோய்களிலிருந்து  காப்பாற்றி  ஆயுளை  அதிகரிக்கும்  மருத்துவம்.
2.   தனுர்  வேதம் :  தற்காத்துக்  கொள்ளும்  போர்ப்  பயிற்சிகளைக்  கற்றுத்  தருவது.
3.   காந்தர்வ  வேதம் :  மனதிற்கு  இன்பமூட்டும்  இசை,  நடிப்பு,  நடனம்  முதலியவை.
4.   அர்த்த  வேதம் :  பொருள்களைச்  சம்பாதிக்கும்  உபாயங்களைத்  தெரிவிப்பது.
-- ஏ.கே.என்.,  டி.ஆர். பட்டினம்.
--   குமுதம்  பக்தி  ஸ்பெஷல்.  29-1-2015.     

Saturday, June 10, 2017

கொடிமரம்

"கோயிலில்  கொடிமரம்  இருப்பதன்  தத்துவம்  என்ன?"
     "ஆலயம்  புருஷாகரம்  என்று  சாஸ்திரம்  கூறுகிறது.  இந்த  வார்த்தையின்  அர்த்தம்  என்னவென்றால்,  ஒரு  மனித  உடலைப்  போன்றதே  ஆலயம்.  கோயிலில்  கருவறை  என்பது  மனிதனின்  தலை  பகுதியைப்  போன்றது.  அதுபோல,  அர்த்தமண்டபம்  மார்புப்  பகுதி.  மார்பின்  இடப்புறம்  இதயம்  துடிப்பதுபோல்  அங்கு  நடராஜர்  பெருமான்  நடமாடிக்கொண்டிருப்பார்.  அதனைத்  தொடர்ந்து  வயிற்றுப்  பகுதியில்  நாடி  எனப்படும்  தொப்புள்  பகுதியாக  இருப்பது  கொடிமரம்.  ராஜகோபுரம்  இறைவன்  திருவடிகளாகும்.  இது  ஆலய  அமைப்பின்படி  கொடிமரம்  நாடி  பிரதேசமாகும்.  பொதுவாக  திருவிழாக்களில்  கொடியேற்றம்  செய்வதற்கும்  பயன்படுகிறது.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத  சிவாச்சாரியார்.  ( அறிவோம்!  தெளிவோம் ! ).
-- தினமலர்  பக்திமலர்.  8-1-2015    

Friday, June 9, 2017

பாகப் பிரிவினை !

  அந்த  ஊரின்  பெரிய  செல்வந்தர்,  தன்  நான்கு  பிள்ளைகளை  அழைத்து,  'என்  காட்டிலுக்கு  அடியில்  பூமியில்  புதைத்து  வைத்துள்ள  நான்கு  பானைகளில்  உள்ளபடி  சொத்தைப்  பிரித்து  எடுத்துக்  கொள்ளுங்கள்'  எனக்கூறி  உயிர்  துறந்தார்.
     அவரது  இறுதிச்சடங்குகள்  முடிந்து,  சில  நாட்களுக்குப்  பிறகு  மகன்கள்  அந்த  நான்கு  பானைகளை  வெளியே  எடுத்தனர்.  வரிசையாக  ஒவ்வொரு  பானையிலும்  மண்,  கரிக்கட்டை,  வைக்கோல்,  எலும்புத்  துண்டு  என  இருந்தன.
     ஒன்றும்  புரியாமல்  அந்தப்  பானைகளை  எடுத்துச்  சென்று  ஓர்  துறவியிடம்  காட்டி,  விளக்கம்  கேட்டனர்.
     வயதில்  மூத்தவனுக்கு  மண்  பானை,  இரண்டாமவனுக்கு  வைக்கோல்  பானை,  மூன்றாமவனுக்கு  எலும்புத்துண்டு  பானை,  நான்காமவனுக்கு  கரித்துண்டு  பானைகளைக்  கொடுத்தார்.  ஒன்றும்  புரியாது  நால்வரும்  விழிக்க,  துறவி  விளக்கினார்.
     மண் - செல்வந்தரின்  நிலங்கள்,  வைக்கோல் - தானியங்கள்,  எலுபுத்துண்டு - கால்நடைகள்,  கரித்துண்டு - தங்கம்,  வெள்ளி  பாத்திரங்களை  அடையலாம்  எனக்  கூறினார்.  நான்கு  சகோதரர்களும்  அவ்வாறே  தம்  தந்தையின்  சொத்துகளைப்  பிரித்து  எடுத்துக்கொண்டனர்.
-- வீ.லோகநாதன் ,  அம்பத்தூர்  (பக்திக்  கதைகள்)
-- குமுதம்  பக்தி  ஸ்பெஷல்.  29-1-2015.    

Thursday, June 8, 2017

ஹோண்டாவின் ரைடர்

   ஒருவர்  மட்டுமே  உடகார்ந்து  பயணிக்கக்கூடிய  ரைடரை  விரைவில்  கொண்டுவர  உள்ளது  ஹோண்டா.  அலுவலகத்தில்  அடிக்கடி  நடந்து  நடந்து  அலுத்து  போனவர்கள்,  ஓரிடத்திலிருந்து  இன்னொரு  இடத்திற்கு  அடிக்கடி  செல்ல  வேண்டியிருப்பவர்களுக்கு  இந்த  வாகனம்  உதவும்.
மினி  செட்டாப்  பாக்ஸ்
     ஜியோமி  நிறுவனம்  மினி  செட்டாப்  பாக்ஸ்  ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது.  சார்ஜரைவிடவும்   மிகச்  சிறிய  அளவில்  இருக்கும்  செட்டாப்  பாக்ஸ்  மூலம்  டிவி  நிகழ்க்சிகளை  கண்டுகளிக்கலாம்.  திரைப்படங்கள்,  ஸ்போர்ட்ஸ்  சேனலைப்  பார்க்க  முடியும்.
வயர்லெஸ்  ஸ்பீக்கர்
     ஸ்பீக்கர்  தயாரிப்பில்  முன்னணி  நிறுவனமான  கிரியேட்டிவ்  கையடக்கமான  ஸ்பீக்கரை  அறிமுகம்  செய்துள்ளது.  வயர்லெஸ்  முறையில்  இந்த  ஸ்பீக்கர்  இயங்கும்.  முற்றிலும்  ஸ்டெயின்லெஸ்  ஸ்டீலால்  இந்த  ஸ்பீக்கர்  தயாரிக்கப்பட்டுள்ளது.
--  வணிக  வீதி  இணைப்பு.
--   'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  19,  2015.  

Wednesday, June 7, 2017

தானியங்கி கார்கள்

    உலகின்  முன்னணி  கார்  தயாரிப்பு  நிறுவனங்கள்  தானியங்கி  கார்  தயாரிப்பு  முயற்சியில்  இறங்கியுள்ளன.  கூகுள்  நிறுவனம்  தனியாக  செல்ப்  டிரைவிங்  கார்களுக்கான  முயற்சியிலும்  இறங்கியுள்ளது.  கார்  தயாரிப்பு  நிறுவனங்களோ  டிரைவர்  இல்லாமல்  முழுக்க  முழுக்க  சென்சார்கள்  மூலம்  இயங்கக்கூடிய  வாகனங்களை  தயாரிப்பதற்கான  முயற்சியில்  ஈடுப்படுள்ளன.  பிஎம்டபிள்யூ  நிறுவனம்  இதற்கான  முயற்சியில்  ஈடுப்பட்டுள்ளது.
     ஜெர்மனி  மற்றும்  ஐரோப்பிய  சாலைகளில்  இந்த  வகை  கார்களை     பரிசோதித்துள்ளது.  அதிலிருந்து  மேம்படுத்திய  மாடலை  2016ல்  சீன  சாலைகளில்  பரிசோதிக்க  உள்ளதாக  தெரிவித்துள்ளது.
கண்ணாடியில்  திரைப்படம்
     கூகுள்  கண்ணாடி  மூலம்  உலகை  கண்ணருகில்  கொண்டுவந்துவிடலாம்  என்பது  ஒருபக்கம்.  இன்னொருபக்கம்  ஒரு  ஹெட்போனை  மாட்டிக்கொண்டு  இசையை  ரசிப்பது  மட்டுமல்ல,  இனி  படங்களையும்  பார்த்துவிடலாம்.  கண்ணையும்  மறைப்பதுபோல  உள்ள  இந்த  ஹெட்செட்டில்  திரைப்படத்தைப்  பார்ப்பதற்கான  திரை  ஒன்று  உள்ளது.  கண்ணுக்கருகில்  வைத்து  பார்ப்பதால்  ரெட்டினாவை  பாதிக்காத  வண்ணம்  இந்த  திரை  தயாரிக்கப்பட்டிருக்கிறது.  கம்ப்யூட்டர்,  தொலைக்காட்சி  பெட்டி  போன்றவற்றை  நேரடியாக  பார்ப்பதைவிட  இணைப்பு  கொடுத்து  பார்க்கலாம்.  அடுத்த்வர்களுக்கு  தொந்தரவு  கொடுக்காமல்  கண்டு  ரசிக்க  இந்த  கருவி  பயன்படும்.
--  வணிக  வீதி  இணைப்பு.
--   'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  19,  2015.    

Tuesday, June 6, 2017

எதிர்கால சமையலறை

  நவீன  வீடுகளில்  சமையலறை  என்று  தனியாக  அறை  ஒதுக்காமல்  டைனிங்  டேபிளுக்கு  பக்கமாக  கொஞ்சம்  இடத்தை  மட்டும்  ஒதுக்கி  இருப்பார்கள்.
     இதற்கு  ஏற்ப  நவீன  சமையல்  சாதனங்கள்  இருக்கும்.  ஆனால்  வேர்ல்ஃபூர்  நிறுவனம்  எதிர்கால  சமையலறையை  வடிவமைத்துள்ளது.
     சமைப்பதற்கென்று  தனியாக  இடத்தை  ஒதுக்கத்  தேவையில்லை.  நாம்  எந்த  இடத்தில்  இருந்தாலும்  அந்த  இடத்திலேயே  சமைத்துக்  கொள்ளலாம்.
     சமையல்  மேடையோ,  தனியாக  இடமோ  தேவையில்லை.  சாப்பிடும்  மேசையிலேயே  சமைத்துக்  கொள்ளலாம்.  சுற்றுலா  செல்லும்போது  வீட்டுச்  சாப்பாடு  வேண்டும்  என்று  அடுப்பை  தூக்கிச்  சுமக்க  தேவையில்லை.  பாத்திரத்தை  வைப்பதற்கு  ஏற்ற  சமதளம்  போதும்.  முழுக்கவும்  ஸ்மார்ட்  போன்  மூலம்  இதை  இயக்க  வேண்டும்.
     மேசையில்  தெரியும்  திரையின்  மூலமும்  இதை  இயக்கலாம்.  லேசர்  கதிர்களால்  இந்த  சமையல்  மேடை  செயல்படும்.  அடுத்த  பத்து  வருடங்களில்  இந்த  முறையில்  சமையல்  வேலைகள்  நடப்பதற்கான  சாத்தியங்களும்  உள்ளன.
--  ( தொழில் நுட்பம் ).  வணிக  வீதி  இணைப்பு.
--   'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  19,  2015.   

Monday, June 5, 2017

பெயர் வந்தது எப்படி?

  இந்து  சமய  வானவியல்  சாஸ்திரப்படி  "சௌரமானம்"  என்றும்  "சாந்த்ரமானம்"  என்றும்  வருஷத்தைக்  கணக்குப்  பண்ணுவதில்  இரண்டு  முறை  உள்ளது.  சூரியகதியை  கொண்டு  மாதவருடங்களை  கணக்கிடும்  முறை  சௌரமானம்  எனப்படும்.  சூரியன்  ஒரு  ராசியில்  நுழைந்து,  அங்கு  சஞ்சரித்து,  அங்கிருந்து  அடுத்த  ராசிக்கு  நுழையும்  முன்  வரை  உள்ள  காலம்  ஒரு  மாதம் (  சூரிய  மாதம் )  எனப்படும்.  எனவே  சூரிய  சித்தாந்த  நூலின்படி,  சூரியன்  சஞ்சாரம்  செய்து  கொண்டிருக்கும்  அந்த  ராசியின்  பெயரே  அந்த  மாதத்தின்  பெயராகும்.  சௌரமான  முறைப்படி  மேஷம்,  ரிஷபம்,  மிதுனம்,  கடகம்,  சிம்மம்,  கன்னி,  துலாம்,  விருச்சிகம்,  தனுசு,  மகரம்,  கும்பம்,  மீனம்  என  பன்னிரண்டு  ராசியின் பெயர்களே  மாதங்களின்  பெயர்களாகும்.  சூரியன்  ஒன்பதாவது  ராசியான  தனுர்  ராசியில்  பயணம்  செய்யும்  காலம்  "தனுர்  மாதம்"  எனப்படும்.
     சந்திரகதியை  கொண்டு  மாதவருடங்களை  கணக்கிடும்  முறை  சாந்த்ரமானம்  எனப்படும்.  ஒரு  கிருஷ்ணபக்ஷம் ( பௌர்னமி  தொடங்கி  அமாவாசை  வரை )  மற்றும்  சுக்லபக்ஷம் (  அமாவாசை  தொடங்கி  பௌர்ணமி  வரை )  முழுவதும்  சேர்த்து  இருக்கும்  காலம்  ஒரு  மாதம் ( சந்திர  மாதம் )  என  கணக்கிடப்படுகிறது.  பெரும்பாலும்  ஒரு  கிருஷ்ணபக்ஷ  ப்ரதமையிலிருந்து  அடுத்த  கிருஷ்ணபக்ஷ  ப்ரதமை  வரை  ஒரு  மாதம்  என்ற  கணக்கு  உள்ளது.
     ஒரு  சில  வழக்கத்தில்  ஒரு  பௌர்ணமியிலிருந்து  அடுத்த  பௌர்ணமி  வரை  ஒரு  மாதம்  என  கணக்கு  உள்ளது.  சாந்த்ரமான  முறைப்படி  எந்த  நக்ஷத்திரம்  பௌர்ணமியன்று  சந்திரனுக்கு  அருகே  உள்ளதோ  அந்த  நக்ஷத்திரத்தின்  பெயரையே  அந்த  மாதத்தின்  பெயராக  வைப்பார்கள்.சாந்த்ரமான  முறைப்படி  வருடப்பிறப்பிலிருந்து  ஒன்பதாவது  மாதத்தில்  பௌர்ணமியன்று,  சந்திரனுக்கு  அருகே  உள்ள  நக்ஷத்திரம் "ம்ருகசீர்ஷம்"  ஆகும்.  ஆகவே  இந்த  மாதத்தின்  பெயர்  "மார்க்கசீர்ஷம்."  மார்க்கசீர்ஷம்  மருவி  மார்கழி  ஆகிவிட்டது.  எனவே  சௌர்மானப்படி  அழைக்கப்படும்  தனுர்  மாதம்,  சாந்த்ரமானப்படி  மார்கழி ( மார்கசீர்ஷம் )  மாதம்  ஆகும்.
-- கார்த்திக்  ஜெயராமன்.  (  ஆனந்த ஜோதி ).  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  வியாழன்,  ஜனவரி  8,  2015. 

Sunday, June 4, 2017

மனிதத் தோல் போர்த்திய மிருகம்

"ஏஷாம்  ந  வித்யா  ந  தபோ  ந  தானம்,
 ஞானம்  ந  ஷீலம்  ந  குணோ  ந  தர்ம;
 தே  மர்த்யலோகே  புவி  பாரபூதா
 மனுஷ்யரூபேண  ம்ருகாஸ்சரந்தி"
என்று  ஒரு  ஸ்லோகம்.
இதன்  விளக்கம் :
     பசுத்தோல்  போர்த்திய  புலியைப்  பற்ரி  நாம்  படித்திருக்கிறோம்.  மனிதத்  தோல்  போர்த்திய  மிருகங்கள்  எவை  என்றும்,  நம்  பெரியோர்களால்  குறிப்பிடப்படிருக்கிறார்கள்.
     படிக்காதவர்கள்,  தியானம்  செய்யாதவர்கள்,  தானம்  கொடுக்காத  கஞ்ச  மகா  பிரபுக்கள்,  நற்குணம்  இல்லாதவர்கள்,  நல்ல  பண்பாடு  இல்லாதவர்கள்,  தார்மீக  வழியில்  நடக்காதவர்கள்  ஆகியோரே  மனிதத்  தோல்  போர்த்திய  மிருகங்கள்  ஆவார்கள்.
-- சித்ரா  நாராயணன்.  ( நல்ல  வார்த்தை  நாலஞ்சு! ).
--  தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஜூன், 3,  2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

Saturday, June 3, 2017

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1.   லலிதாம்பிகையைச்  சுற்றி  வீற்றிருப்பவர்கள்... எட்டு  வாக்தேவதைகள்.
2.   பகவத்கீதையின்  வேறு  பெயர்கள்... ஹரி  கீதை,  வியாசகீதை.
3.   புனித  தீர்த்தங்களில்  நீராடுவதை,  கிரியா  ஸ்நானம்  என்பர்.
4.   வைராக்யம்  என்பதன்  பொருள்,  ஆசையற்ற  மனநிலை.
5.   வசிஷ்டர்  ராமனுக்கு  உபதேசித்த  அறிவுரை  அடங்கிய  நூல்,  யோக  வசிஷ்டம் ( ராமகீதை ).
6.   கொடிய  விலங்குகளை  அடக்க  உதவும்  சித்தி ( சித்து ),  வாசித்வம்.
7.   காசியில்  குமரகுருபரர்  அடக்கிய  விலங்கு ...  சிங்கம்.
8.   சாஸ்திரப்படி  உலகிலுள்ள  உயிர்களின்  எண்ணிக்கை ...  84  லட்சம்.
9.   கையால்  வழங்கும்  தீட்சை ... ஹஸ்த  மஸ்தக  தீட்சை.
10. பிநாகம்  என்ற  வில்  யாருக்குரியது?...சிவன்.
-- அர்ச்சனைப்பூக்கள் .
-- தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஜூன், 3,  2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

Friday, June 2, 2017

பூணூல் அணிவதன் நோக்கம்.

  இது  வேதம்  பயிலவும்  வேதநெறி  நிற்பதற்கும்  வழங்கப்படுகின்ற  ஓர்  அதிகார  அடையாளம்.
     இது  பற்றி  இரு  இடங்களில்  திருமூலர்  திருமந்திரத்தில்  சொல்கிறார்:
     பூணூலும்,  குடுமியும்  வேதாந்தைத்தையும்  ஞானத்தையும்  உணர்த்தும்  அடையாளங்களாக,  அந்தணர்களுக்கு  உரியது  என  'அந்தணர்  ஒழுக்கம்'  எனும்  பகுதியிலும்,  6ம்  தந்திரத்தில்  திருநீறு  அதிகாரத்தில்,
    'நூலும்  சிகையும்  உணரார்  நின்  மூடர்கள்
    நூலது  வேதந்தம்  நுண்சிகை  ஞானமாம்'
எனவும்  இதன்  மகத்துவத்தைக்  குறிப்பிடுகிறார்.
-- ( அறிவோம் !  தெளிவோம் ! ).
-- மயிலாடுதுறை  ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்.
--  தினமலர் பக்திமலர்.  15-1- 2015. 

Thursday, June 1, 2017

அபிஷேகத் திரவியம்

 எண்ணை,  மாக்காப்பு,  நெல்லிக்காப்பு,  மஞ்சள்காப்பு,  பஞ்சகவ்யம்,  ரசபஞ்சாமிர்தம்,  பல  பஞ்சாமிர்தம்,  பால்,  தயிர்,  நெய்,  தேன்,  சர்க்கரை,  கருப்பஞ்சாறு,  எலுமிச்சைச்  சாறு,  நாரத்தைச்  சாறு,  தமரத்தம்சாறு,  குளஞ்சிச்  சாறு,  மாதுளம்சாறு,  இள நீர்,  சந்தனம்  முதலியன.
மங்கலம்
     சாமரம்,  நிரைகுடம்,  கண்ணாடி,  தோட்டி ( அங்குசம் ),  முரசு,  விளக்கு  கொடி,  இனைக்கயல் ( இன்னொரு  வகை ),  இடபம்,  சீவற்சம்,  சங்கு,  சுவத்திகம்,  சாமரம்,  நிறைகுடம்,  கண்ணாடி  விளக்கு  முதலியன.
--   ( பக்தி  துணுக்குகள் )
-- தினமலர் பக்திமலர்.  15-1- 2015.