Friday, May 19, 2017

பஞ்ச "வ" காரங்கள்.

  சமஸ்கிருதத்தில்  நம்  வாழ்க்கையில்  மதிப்பும்  அதன்  மூலம்  வெற்றி  பெற  ஐந்து  "வ" காரங்கள்  குறிப்பிடப்படுகின்றன.  அதாவது  'ஐந்து  வார்த்தைகள்'.  இந்த  வார்த்தைகளை  நாம்  வாழ்க்கையில்  கடைபிடிப்பது  அவசியம்  என்று  நமக்கு  ஒரு  ஸுபாஷிதம்  ( நல்ல  வார்த்தைகள்  கொண்ட  ஸ்லோகம் )  மூலம்  தெரியப்படுத்தப்படுகிறது.
     இந்த  ஸுபாஷிதத்தை  பார்ப்போமா?
வஸ்த்ரேண  வபுஷா  வாசா  வித்யா  விநயேன  ச!
வகாரை:  பஞ்சபிஹீன:  நரோ  நாயாதி  கவ்ரவம்!!
     இதன்  விளக்கம்  என்ன?
     குறிப்பிட்ட  ஐந்து  குணாதிசயங்கள்  உள்ள  மனிதர்கள்,  மரியாதைக்குரியவர்களாகவும்,  போற்றத்தக்கவர்களாகவும்,  வணங்கத்தக்கவர்களாகவும்  கருதப்படுகிறார்கள்.
     அந்தச்  சிறப்பியல்புகள்  என்னென்ன?
     வஸ்த்ரா,  வபுஷா,  வாசா,  வித்யா  மற்றும்  விநயா  ஆகும். ( வஸ்த்ரா  என்றால்  நல்ல   உடை  அணிந்தவர்.  வபுஷா  என்றால்  நல்ல  உடலமைபுக்  கொண்டவர்.  வித்யா  என்றால்  நல்ல  கல்வி,  கேள்விகளில்  சிறந்தவர்.  விநயா  என்றால்  நல்ல  வினயமாகப்  பேசத்தெரிந்தவர்.)
-- சித்ரா நாராயணன்.  ( நல்ல  வார்த்தை  நாலஞ்சு! ).
--  தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

No comments: