Saturday, April 15, 2017

அணுக்கழிவு

அணுக்கழிவா...  அதிசய  ஆராய்ச்சியா!?  மர்மம்  விதைக்கும்  நியூட் ரினோ.
     அடுத்த  சில  ஆண்டுகளில்  தமிழகத்தை  அலறவைக்கப்போகிற  சொல்... 'நியூட்ரினோ'!
     1,450  கோடி  ரூபாய்  செலவிலான நியூட்ரினோ ஆய்வு  மையம்  தேனி  அருகே  தேவாரம்  மலைப்பகுதியில்  அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்  நிலையில்,  இந்தத்  திட்டம்  தங்களுக்கு  நன்மையானதா,  தீமையானதா  என்பது  யாருக்கும்  தெரியவில்லை.  பலர்  அஞ்சுகின்றனர்;  சிலர்  நன்மை  நடக்கும்  என்கின்றனர்.  ஆனால்,  யாருக்கும்  நியூட்ரினோ திட்டம்  என்பது  என்ன  என்பதுகூட  தெரியவில்லை.  தெரிந்தது  எல்லாம், 'பூமிக்குள்ள  பெருசா  குகை  தோண்டி  எதையோ  ஆராய்ச்சி  செய்யப்  போறாங்க'  என்பது  மட்டும்தான்.
நியூட்ரினோ'  திட்டம்  என்றால்  என்ன?
     "நியூட்ரினோ  என்பது  சூரியனில்  இருந்தும்,  இந்தப்  பேரண்டத்தின்  மற்ற  விண்மீன்களில்  இருந்தும்  வெளிப்படும்  துகள்.  இது  மிக, மிக  நுண்ணியது.  ஒரு  மில்லிகிராம்  எடையில்  பல  கோடி,  கோடி  நியூட்ரினோ  துகள்கள்  இருக்கும்.  மனிதன்  இதுவரை  கண்டறிந்த  பொருள்களிலேயே  எடை  குறைந்தது  இதுதான்.  இந்த  நியூட்ரினோ  துகள்  கிட்டத்தட்ட  ஒளியின்  வேகத்தில்  பயணிக்கக்  கூடியது.  தன்  எதிரில்  உள்ள  எந்தப்  பொருளையும்  ஊடுருவிச்  செல்லக்கூடியது.  இப்போது  இதை  வாசித்துக்கொண்டிருக்கும்  இந்தக்  கணத்தில்கூட ,  பல்லாயிரம்  கோடி  நியூட்ரினோ  துகள்கள்  உங்களை  ஊடுருவிச்  சென்றுகொண்டிருக்கும்.  பூமியின்  இந்தப்  பக்கத்தில்  இருந்து  அந்தப்  பக்கம்  ஊடுருவி  சென்று  அண்ட  சராசரத்தில்  கலந்துவிடுகின்றன.
     பொதுவாக  ஒரு  பொருளை  ஆராய்ச்சி  செய்ய  வேண்டும்  என்றால்,  அது  மற்ற  பொருள்களுடன்  எப்படி  வினை  புரிகிறது  என்பதை  வைத்தே  அந்த  ஆய்வு  செய்யப்படும்.  ஆனால்,  நியூட்ரினோ  என்பது  வேறு  எந்தப்  பொருளுடனும்  வினை  புரியாத,  மின்காந்த  சக்தியற்ற  ஒரு  துகள்.
ஏன்  தேனி?
     தேனி,  தேவாரம்  அருகே  உள்ள  பொட்டிபுரம்  கிராம  எல்லையில்  உள்ள  மலைப்பகுதிதான்  ஆய்வகம்  அமையவிருக்கும்  இடம்.  இதை  India -- based  Neutrino  Observatory ( INO ) என்கிறார்கள்.  சுருக்கமாக,  ஐ.என்.ஓ.  இப்போது  பொட்டிபுரத்தில்  ஐ.என்.ஓ.  செயல்படுத்தப்படும்  இடத்தைச்  சுற்றி  சுமார்  ஐந்து  கி.மீ.,  சுற்றளவுக்கு  கம்பி  வேலிகள்  போடப்பட்டுள்ளன.
      இங்கு  அமைக்கப்படும்  ஐ.என்.ஓ.  ஆய்வகம்  என்பது,  உலகளவில்  நியூட்ரினோ  ஆய்வின்  ஓர்  அங்கம்.  மற்ற  நாடுகளின்  ஆய்வகங்களிலிருந்து  நியூட்ரினோ  இங்கு  அனுப்பப்பட்டு,  இங்கிருந்து  அங்கு  அனுப்பப்பட்டு  ஆய்வுகள்  நடத்தப்படும்.
      தற்போது  நியூட்ரினோ  ஆய்வு  மையம்  அமைய  உள்ள  இடத்தைச்  சுற்றி  10க்கும்  மேற்பட்ட  அனைகள்  உள்ளன.  இந்த  நிலையில்  சுமார்  2.5  கி.மீ.  ஆழத்துக்கு  பூமிக்குள்  சுரங்கம்  தோண்டும்போது  ஏராளமான  வெடிமருந்துகளை  வெடிக்கச்  செய்து  பாறைகளைத்  தகர்க்க  வேண்டும்.  அது  அனைகளுக்கும்,  மலைகளுக்கும்,  காடுகளுக்கும்,  உயிரினங்களுக்கும்  நிச்சயம்  கடும்  பாதிப்பை  ஏற்படுத்தும்.
     "ஐ.என்.ஓ.  ஆய்வகத்தில்  அணு  உலைக்  கழிவுகளைக்  கொட்டுவது  என்பது  சாத்தியமே  இல்லாதது.  காஸ்மிக்  கதிர்களை  வரவிடாமல்  தடுத்து  நியூட்ரினோவைப்  பற்றி    ஆய்வு  செய்யத்தான்  பூமியின்  அடியாழத்துக்குச்  செல்கிறொம்.  அப்படி  இருக்கும்போது,  கதிர்வீச்சை  உமிழக்கூடிய  அணுக்கழிவை  எப்படி  அதற்குள்  கொட்ட  முடியும்?  அதிகம்  வேண்டாம் ... ஒரே  ஒரு  சாக்கு  மூட்டை  அளவு  அணுக்  கழிவைக்  கட்டி  அந்தச்  சுரங்கத்தில்  போட்டுவிட்டால்கூட  நியூட்ரினோ  ஆய்வை  நடத்தவே  முடியாது.  10  ஆயிரம்  வாட்ஸ்  மின்விளக்கின்  முன்பு  ஒரு  மெழுகுவர்த்தியைப்  பார்க்க  முடியாது  இல்லையா... அதுபோல"  என்று  மறுக்கிரார்  த.வி. வெங்கடேஸ்வரன்.
      கண்ணுக்குத்  தெரியாத  நியூட்ரினோவைக்  கண்டறிய  பல்லாயிரம்  கோடியை  ஒதுக்கும்  இந்திய  அரசு,  கண்ணுக்குத்  தெரியும்  மனிதக்  கழிவுகளை  மனிதர்களே  அள்ளும்  கேவலத்தை  ஒழிக்க  எத்தனை  ஆயிரம்  கோடியை  ஒதுக்கியது?  அதற்கு  ஒரு  கருவி  செய்ய  ஆய்வகத்தை  அமைத்தது?  இரண்டையும்  நேருக்குநேர்  வைப்பது  பொருத்தமற்ர  ஒப்பீடு  என்று  சொல்ல  முடியாது.  அடிப்படை  வசதிகள்கூட  நிறைவேறாத  தெருப்  புழுதிகளில்,  சாக்கடை  ஓரங்களில்  தலைமுறை  தலைமுறையாக  வாழ்கிற  மக்களைக்கொண்ட  இந்தியா  போன்ற  ஒரு  நாடு  எதற்கு  முன்னுரிமை  கொடுக்க  வேண்டும்  என்ற  கேள்விதான்  இதற்கான  அடிப்படை.
--  பாரதி  தம்பி .  ( விகடன்  பார்வை ).
-- ஆனந்த விகடன்.  21-5-2014.    

No comments: