Thursday, April 27, 2017

டிப்ஸ்...டிப்ஸ்...

*   தேங்காய்  மூடிகளை  அப்படியே  ஃப்ரீஸரில்  வைத்துவிடுங்கள்.  உபயோகிப்பதற்கு   10  நிமிடங்களுக்கு  முன்னால்  எடுத்து  வெளியே  வைத்து  விட்டு,  ஒரு  கத்தியால்  வெள்ளைப்  பகுதியை  மட்டும்  அகழ்ந்து  எடுத்தால்,  தேங்காயின்  உள்தோல்  வாராமல்  வெண்மையான  பகுதி  மட்டும்  கழன்று  வந்துவிடும்.  இதைத்  துண்டுகளாக்கி,  மிக்ஸியில்  பொடித்தால்,  பூப்பூவான,  வெள்ளை  வெளேர்  தேங்காய்த்  துருவல்  ரெடி.
*   பிரெட்டின்  ஓரங்களை  வெட்டிய  பின்  தூக்கி  எறியாமல்,  பாலில்  கொஞ்ச  நேரம்  ஊறவைத்து,  சப்பாத்தி  மாவுடன்  சேர்த்துப்  பிசைந்தால்,  சப்பாத்தி  மிருதுவாக  இருப்பதுடன்  கூடுதல்  சப்பாத்திகளும்  கிடைக்கும்.
*   ஆப்ப  மாவு,  தோசை  மாவு  முதலியவை  கொஞ்சமாக  இருந்தால்,  அதில்  கடலை  மாவு,  உப்பு,  பொடியாக  நறுக்கிய  வெங்காயம்,  பச்சைமிளகாய்,  கறிவேப்பிலை  சேர்த்து,  சுவையான  பக்கோடா  செய்யலாம்.
*   ஜாம்,  ஊறுகாய்  பாட்டில்கள்  இறுக  மூடிக்கொண்டு  திறக்க  முடியவில்லையா?  பாட்டிலைத்  தலைகீழாகக்  கவிழ்த்து,  இளம்  சூடான  வெந்நீரில்  அமிழ்த்தி... சில  விநாடிகள்  கழித்து  வெளியே  எடுத்தால்,  சுலபமாகத்  திறக்கலாம்.
*   கொத்துமல்லித்  தழையை,  ஈரமில்லாமல்  வாழை  இலையில்  சுற்றி  ஃப்ரிட்ஜில்  வைத்தால்  நான்கைந்து  நாட்கள்  வரை  பசுமையாக  இருக்கும்.
-- அவள் விகடன்.  29-7-2014.
-- இதழ் உதவி :  H. சுரேஷ்,  காரைக்கால்.  

No comments: