Sunday, April 23, 2017

டிப்ஸ்...டிப்ஸ்...

*   எந்தவித  பருப்புத்  துவையல்  செய்தாலும்  இரண்டு,  மூன்று  பருப்பு  வகைகளை  ( துவரம்பருப்பு,  கடலைப்பருப்பு,  பயத்தம்பருப்பு )  சேர்த்துச்  செய்தால்,  சுவை  கூடுவதுடன்  கூடுதல்  புரதச்சத்தும்  கிடைக்கும்.
*   உருளைக்கிழங்கை  முழுதாக  வேகவைக்கும்போது,  அதனுடன்  ஒரு  பிடி  புதினா  இலைகளையும்  சேர்த்து  வேக  வைத்தால்,
கிழங்கின்  மண்வாசனை  நீங்கிவிடும்.  இந்தக்  கிழங்கை  சமையலில்  சேர்க்கும்போது  ருசியும்  சத்தும்  கூடும்.
*   பாயசத்துக்கு  முந்திரிப்  பருப்பு  இல்லையென்றால்  கவலைப்பட  வேண்டாம்.  இரண்டு  ஸ்பூன்  நெய்யில்  கைப்பிடி  அளவு  வேர்க்கடலையை  பொன்னிறமாக  வருத்து,  பாயசத்தில்  போட்டால்  சுவை  கூடும்.
*   வாழைக்காய்,  உருளைக்கிழங்கு,  சௌசௌ,  கத்தரிக்காய்  போன்றவற்றில்  பஜ்ஜி  செய்யப்போகிறீர்களா?  காய்களை  வில்லைகளாக  நறுக்கி,  ஒரு  வில்லையின்  மேல்  ஏதாவது  தொக்கு  அல்லது  ஊறுகாய்  விழுதைத்  தடவி  விட்டு,  அதன்  மேல்  இன்னொரு  வில்லையை  வைத்து  மூடி,  பஜ்ஜி  மாவில்  தோய்த்து  பஜ்ஜி  தயாரித்தால்,  சுவையாக  இருக்கும்.
*   நீளமான  முழுக்  கத்தரிக்காய்களில்  ஸ்டஃப்டு பொரியல்  செய்யும்போது,  கத்தரிக்காயை  மேலிருந்து  பாதிவரை  நான்காகக்  கீறவும்.  பின்னர்  காயைத்  தலைகீழாகப்  பிடித்துக்கொண்டு,  மீண்டும்  நான்காகக்  கீறவும்.  நடுவில்  காய்  பிய்ந்துவிடாமல்  கவனமாகச்  செய்யவும்.  பிறகு,  மசாலாவை  இரு  பக்கங்களிலும்  ஸ்ட்ஃப்  செய்து,  இட்லித்  தட்டில்  5-10  நிமிடங்கள்  வேகவிட்டு,  பின்னர்  வதக்கினால்,  விரைவாகவும்,  உடையாமலும்  நன்கு  வதங்கும்.
-- அவள் விகடன்.  29-7-2014.
-- இதழ் உதவி :  H. சுரேஷ்,  காரைக்கால். 

No comments: