Wednesday, April 12, 2017

ராகு காலம்.

ராகு  காலத்தில்  முதல்  1  மணி  நேரம்  கழித்து  கடைசியில்  வருகிற  அரை  மணி  நேரம் 'அமிர்தராகு' காலம்.  இந்த  நேரத்தில்  ஏதாவது  செய்தலும்  நன்மையே  தரும்  என்பார்கள்.  நன்மைகள்  பெருகி  வரும்.
     சுவர்ணபானு  என்ற  அரக்கன்  தேவர்  வேடம்  பூண்டு,  திருமாலின்  கையில்  ஒரு  துளி  அமிர்தம்  வாங்கினான்.  பிறகு  சூரிய,  சந்திரர்களால்  சுட்டிக்காட்டப்பட்டு  மோகினி  அவதாரம்  கொண்ட  திருமாலின்  கையில்  அகப்பையால்  தலை  துண்டாடப்பட்டு  தலையும்  உடம்பும்  ராகு,  கேதுவாக  மாறியதாகப்  புராணங்கள்  சொல்கின்றன.  அந்த  ஒரு  துளி  அமிர்தத்தைச்  சுவைத்த  காரணத்தால்  ராகு காலத்தின்  கடைசி  அரை  மணி  நேரம்  நன்மை  பயக்கும்.  அதித்தான்  'அமிர்த ராகு காலம்'  என்பார்கள்.
     மகரத்தில்  ராகுவும்,  கடகத்தில்  கேதுவும்  இருக்க  பிறந்தவர்கள்  தேவபாஷை  எனப்படும்  சம்ஸ்கிருதம்  முதலிய  மொழிகளில்  தேர்ச்சிப்  பெற்று  பல  மோழிகளைப்  பேச  வல்லவர்களாக  கருதப்படுவார்கள்.
--  ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி.  அகிலாண்டேஸ்வரி ஐயர்.  ( ஜோதிடம்  தெளிவோம் ). பெண் இன்று.
--  ' தி  இந்து'  ஞாயிறு,  டிசம்பர்  28,  2014.  

No comments: