Saturday, March 18, 2017

பூஜை முறை !

  சிவபெருமானை  நாமெல்லாம்  வில்வம்  கொண்டுதான்  பூஜிப்போம்.  ஆனால்,  கண்ணப்பர் -- மாமிசம்,  சாக்கிய  நாயனார் --  கற்கள்,  பாணபத்திரர் -- இசை,  நாவரசர்  மற்றும்  சம்பந்தர்  --  கொஞ்சு தமிழ்,   சுந்தரர் -- மிஞ்சு தமிழ்,  மாணிக்கவாசகர்  --  கண்ணீர்  கொண்டு  பூஜித்திருக்கிறார்கள்.
-- ஆர். ஆர். பூபதி,  கன்னிவாடி.
பற்று,  ஆசை,  பேராசை !
     ஒரு  துறவியிடம்  இருந்த  பல  சீடர்களுள்  ஒருவன், "குருவே! பற்று,  ஆசை,  பேராசை  இவைகளின்  பொருள்  என்ன?"  என்று  கேட்டான்.
    "சீடனே!  தன்  பொருள்  மேல்  உண்டாகும்  விருப்பத்திற்கு  'பற்று'  என்றும்;  பிறர்  பொருள்  மீது  உண்டாகும்  விருப்பத்திற்கு  'ஆசை'  என்றும்;  கிடைக்காத  பொருள்  மீது  உண்டாகும்  விருப்பத்திற்கு  'பேராசை'  என்றும்  பொருளாகும்'  என்றார்  துறவி.
-- டி.பூபதிராவ்,  காஞ்சிபுரம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர்  16-- 31,  2013.  

No comments: