Thursday, February 9, 2017

தள்ளாமை தவிர்க்கும் வாழையிலை

*   வேப்பிலைக்  கொழுந்தை  அரைத்துத்  தயிருடன்  கலந்து  சாப்பிட்டால்  பருத்தொல்லை  நீங்கும்.
*   காலையில்  சத்துள்ள  உணவும்  இரவில்  அரை  வயிறு  உணவும்  சாப்பிட்டு  வந்தால்  ஆயுள்  அதிகரிக்கும்.
*   வாழையிலையில்  தொடர்ந்து  சாப்பிட்டு  வந்தால்  முதுமை,  தலை  நரைத்தல்,  தள்ளாமை  ஆகியவை  காலம்  தாழ்த்தி வரும்.
 *  வெந்தயத்தை  தினமும்  பச்சையாகச்  சாப்பிட்டு  வந்தால்  வயிற்றிலுள்ள  கிருமிகள்  அழிந்துவிடும்.
*   எண்ணெய்  தேய்த்துக்  குளிக்கும்போது  வெந்நீரில்  சிறிதளவு  வினிகர்  கலந்து  குளித்தால்  தலைமுடி  மிருதுவாகும்.
*   காய்ச்சல்  குணமாக  மிளகைப்  பொடி  செய்து  கஷாயமாகக்  குடித்துவரலாம்.
*   புதினா  இலைகளை  வெயிலில்  காயவைத்துப்  பொடி  செய்து  வைத்துக்  கொண்டு  தனமும்  பல்  துலக்கும்போது  அந்த
    பொடியுடன்  உப்பு  சேர்த்துத்  துலக்கினால்  பல்  நோய்கள்  வராது.
-- சொ.மு.முத்து.  ஓமலூர்.  ( குறிப்புகள்  பலவிதம் ). .
--  'தி இந்து' நாளிதழ்.  பெண் இன்று  இணைப்பு. ஞாயிறு , டிசம்பர்  7 , 2014. 

No comments: