Tuesday, February 21, 2017

மெட்ராஸ் ஐ ! தடுப்பது எப்படி ?

*   பாதித்த  கண்ணை  கசக்கக்  கூடாது.
*   கறுப்புக்  கண்ணாடி  அணியலாம்.
*   மருத்துவர்  ஆலோசனைப்படி  'ஐ  டிராப்'  போடலாம்.  முடிந்தவரை  கண்களுக்கு  ஓய்வு  கொடுக்கலாம்.
*   அவ்வப்போது  குளிர்ந்த  நீரில்  கைகளைக்  கழுவி  சுத்தமாக  வைத்திருப்பது  அவசியம்.
*   பாதித்தவர்  பயன்படுத்தும்  கர்ச்சிப்,  தலையணை  பயன்படுத்தக்  கூடாது.
*   நோய்  பாதிக்காத  கண்ணில்  மருந்து  அல்லது  'ஐ டிராப்'  விட  வேண்டாம்.
ஷாம்பூ  ஜாக்கிரதை!
     கண்  அழற்சி  என்பது  இன்ஃபெக் ஷன்,  அலர்ஜி,  கெமிக்கல்  என  மூன்று  வகைகளில்  வரும்.  வைரஸ்,  பாக்டீரியா  மூலம்  பரவுவது  முதல்  வகை.  அதாவது  'இன்ஃபெக்ட்டிவ்,'  ஷாம்பூ,  நீச்சல்  குளத்தில்  இருக்கும்  குளோரின்,  புகை  உள்ளிட்டவற்றால்  ஏற்படுவது  அலர்ஜி.  மூன்றாவது  வகை  தூசு,  துரும்பு,  தாவரங்களின்  மகரந்தங்களால்  உண்டாவது.
--  எஸ்.அன்வர்.
-- குமுதம்  வார இதழ்.  5-11-2014.  
--  இதழ் உதவி :  P. சம்பத் ஐயர்.  திருநள்ளாறு.  

No comments: