Wednesday, February 1, 2017

பாம்புகள்

பாம்புக்கு  நாக்குதான்  மூக்கு.
*   பாம்புகள்  மாமிச  உண்ணிகள்.  மனிதனின்  மூதாதையர்களாகக்  குரங்குகள்  கருதப்படுவதைப்  போல  பாம்புகளுக்கு
    மூதாதையர்  பல்லிகள்  என்று  கருதப்படுகின்றன.
*   பாம்புகளுக்குப்  பற்கள்  கிடையாது.  அதனால்  இரையை  அப்படியே  முழுமையாக  விழுங்க  வேண்டும்.  அதற்கேற்ற  மாதிரி
    பாம்புகளின் கபாலத்தில்  பலவகை  இருக்கும்.  ஏனெனில்  தனது  தலையை  விடப்  பெரிய  உயிர்களைத்  தின்பதற்கும்,
    வேகமாக  விழுங்குவதற்கும்  தசைகள்  தேவை.
*   பாம்புகள்  ஒல்லியான  உடலமைப்பைப்  பெற்றிருப்பதால்  அவற்றின்  சிறுநீரகங்கள்  பக்கவாட்டில்  இல்லாமல்  ஒன்றன்  பின்
    ஒன்றாக  அமைந்திருக்கும்.
*   பாம்புகளுக்குக்  கால்கள்  கிடையாது.  ஆனாலும்  உடலால்  நிலத்தில்  ஊர்ந்து  வேகமாக  நகரும்.  சில  பாம்புகள்  நீரிலும்
    வேகமாக  நீந்தும்.
*   பாம்புகளுக்குக்  கண்  இமைகள்  கிடையாது.
*   அண்டார்டிகா  கண்டத்தைத்  தவிர  உலகின்  சகல  பகுதிகளிலும்  பாம்புகள்  உள்ளன.
*   பாம்பின்  தோல்  மென்மையாகவும்  உலர்வாகவும்  இருக்கும்.  அது  சட்டை  என்று  அழைக்கப்படும்.
*   பாம்பு  தனது  தோல்  சட்டையை  ஆண்டுக்குப்  பல  முறை  உரிக்கும்.
*   பாம்பு  தனது  நாக்கின்  மூலம்  வாசனையை  அறிகிறது.
-- ஷங்கர்.  ( உயிரினம் ).  மாயாபஜார்.
--  'தி இந்து' நாளிதழ். புதன்,  ஜூன் 11, 2014.

No comments: