Wednesday, December 7, 2016

புன்னகைப் பக்கம்!

*   "அந்தக்கால சாமியார்களுக்கும் இந்தக்கால சாமியார்களுக்கும் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம்."
     "எப்படி?"
     "அந்தக்கால சாமியார்கள் பெண்களை தாயாகப் பார்த்தாங்க.  இந்தக்கால சாமியார்கள் தாயாக்கப் பார்க்குறாங்க."
*   "இதைப் பார்த்தீங்களா?  ரோட்டுல ஒரு நாய் செத்துக்கிடக்கு.  சிங்கப்பூர்ல இது நடக்குமா?"
    "நாய் செத்துட்டா சிங்கப்பூர்லயும் நடக்காதுடி!"
*   "நோட்டாவுக்கு விழுந்திருக்கற வாக்குகளைப் பார்த்ததும் தலைவர் என்ன சொன்னார்?"
    "அடுத்த முறை தேர்தல்லே நிக்கும்போது அதையே நம்ம கட்சி சின்னமா வச்சுடலாம்னு சொன்னார்!"
*   "சார்! நம்ம ஆபீஸ் பியூன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்."
    "தண்ணி அடிச்சுப் பார்த்தீங்களா?"
    "ஏற்கனவே தண்ணி ய்டிச்சுத்தான் விழுந்திருக்கான்!"
*   "ஹலோ இன்ஸ்பெக்டர்!  சோமநகர் ஏழாவது தீருவுல விபசாரம் நடக்குது.  உடனே வர்றீங்களா?"
    "சீச்சீ... வைய்யா போனை.  நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது!"
-- குமுதம்.  4-6-2014.          

No comments: