Wednesday, December 28, 2016

திருவண்ணாமலை

   தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்று திருவண்ணாமலை.  இங்கு 9 கோபுரங்கள்,  2 தீர்த்தங்கள்,  25 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளன.  இக்கோயிலின் உயரம் 217 அடி.
     இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திரு விழாக்கள் நடைபெறும்.  பெரிய திருவிழா கார்த்திகை தீபத் திருவிழா.  அவ்விழாவின் 10-ம் நாள் சிவபெருமான் அம்பாளுக்கு உடலில் இடப்பாகத்தை கொடுத்து பக்தர்களுக்கு ஒரு நிமிடம் அர்த்த நாரீஸ்வரர் தரிசனம் கொடுப்பார்.  தீபத் திருவிழா தொடங்கி 10-ம் நாள் 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மாலை தீபம் ஏற்றப்படும்.  தீபம் ஏற்ற 6 அடிக்கு மேல் உயரம் உள்ள கொப்பரை பயன்படுத்தப்படும்.  மொத்தம் 3 ஆயிரம் கிலோ நெய்,  ஆயிரம் மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்படும்.
     முதல் நாள் தீபத்திற்கு 600 லிட்டர் நெய், இரண்டு மூட்டை பஞ்சு, 15 மீட்டர் காடா துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் கொண்டு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.  11 நாட்கள் இந்த மகாதீபம் ஏற்றப்படும்.  மகா தீபம் ஏற்ற உரிமை பெற்றவர்கள் பருவதராஜ குலத்தினர்.
-- தினமலர். பக்திமலர். 27-11-2014.  

No comments: