Thursday, December 22, 2016

வினா - விடை.

*   "சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கடையேழு வள்ளல்கள் யார்?"
      -- எழினி,  காரி,  ஓரி,  நள்ளி,  பாரி,  பேகன்,  மலையன்.
*   "ஐஸ்டர்யா ராயின் மகள் பெயர் என்ன?"
     -- ஆராத்யா.
*   "லோக் சபாவில் நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு,  ஆனால் அந்த
     வாய்ப்பு வழங்கப்படாத எம்.பி. யார்?"
     -- அத்வானி.
*   "தன் பிறந்த நாளை, விசேஷக் காரணத்துக்காக ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடுவார் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர்.
     அவர் யார்?  என்ன காரணம்?"
     -- அந்தப் பிரபலம் இளையராஜா.  கருணாநிதி, இளையராஜா இருவரும் ஜூன் 3-ம் தேதி பிறந்தவர்கள்.  கருணாநிதியின்
      பிறந்த நாளின் முக்கியத்துவம் கருதி, ஒரு நாள் முன்பாக ஜூன் 2-ம் தேதியே தன் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்று
      பழக்கப்படுத்திக்கொண்டார் இளையராஜா.
*   "சென்னை வட்டாரங்களில் மண்ணெண்ணெயை ஏன் கிருஷ்ணாயில் என்று குறிப்பிடுகிறார்கள்?"
     -- கெரசின் ஆயில் என்ற ஆங்கிலப் பதமேபழக்கத்தில் 'கிருஷ்ணாயில்' என்று மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
--நா. சிபிச்சக்கரவர்த்தி.
--  ஆனந்த விகடன்  18- 06- 2014.   

No comments: