Tuesday, December 20, 2016

கவனமாய் இருப்போம் !

*  வழிநெடுகிலும் வாகனங்கள்
    பயணங்களில் கவனமாய் இருப்போம் !
*  வார்த்தைகள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன
    பேசுவதில் கவனமாய் இருப்போம் !
*   சிந்தனையே செயலை முடிவு செய்கிறது
    எண்ணங்களில் கவனமாய் இருப்போம் !
*  எழுத்துகள் எப்போதும் ஆதாரம்
    கையெழுத்தில் கவனமாய் இருப்போம் !
*   சாதிக்க குணங்களே சந்தர்ப்பம் தருகின்றன
    நடத்தையில் கவனமாய் இருப்போம் !
*  வறுமையில் பணத்தின் அருமை தெரிகிறது
   சேமிப்பில் கவனமாய் இருப்போம் !
*  பிரிவில்தான் பாசத்தின் பெருமை தெரிகிறது
   நேசத்தில் கவனமாய் இருப்போம் !
*  கல்விதான் அறிவை தீர்மானிக்கிறது
   படிப்பில் கவனமாய் இருப்போம் !
*  முகம் தான் நினைப்பதை வெளியே காட்டுகிறது
   அக அழகினில் கவனமாய் இருப்போம் !
*  பொய்தான் நம்பகத்தன்மையை அடையாளப்படுத்துகிறது
   உண்மையில் கவனமாய் இருப்போம் !
*  வேலையின் விளைச்சலே பதவியை உயர்த்திடும்
   உழைப்பத்தில் கவனமாய் இருப்போம் !
*  தயக்கத்தில்தான் வெற்றிகள் தள்ளிப்போகிறது
   தைரியத்தில் கவனமாய் இருப்போம் !
*  வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது
   மகிழ்ச்சியில் கவனமாய் இருப்போம் !
*  'எனது' என்பது நிரந்தரமற்றது
   ஈகையில் கவனமாய் இருப்போம் !
*  புகழ் ஒன்றே காலத்தால் அழியாதது
   சாதனையில் கவனமாய் இருப்போம் !
-- என்.ஏகம்பவாணன்,  சென்னை.  ( கவிதைச்சோலை ! ).
-- தினமலர்.  வாரமலர்  சென்னை பதிப்பு. ஜூன் 15, 2014.      

No comments: