Sunday, December 18, 2016

உணவில் விஷம்!

   தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான்.  இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்தும் பேரழிவிற்கு உதாரணம், கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி.  ஒரு காலத்தில் இயர்கை எழில் கொஞ்சும் பகுதியாக  இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரி தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது.  அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப்பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள்.  வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை.  பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக,  நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிகொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!
-- ஆர்.குமரேசன்.  ( விகடன் பார்வை ).
-- ஆனந்த விகடன். 12-11-2014.   

No comments: