Wednesday, November 9, 2016

பூணூல்

பூணூல் அணிவதன் நோக்கம் என்ன?
வேதம் படிக்கவும், வேதநெறி நிற்பதற்கும் வழங்கப்படுகின்ற அதிகார அடையாளமே பூணூல். இது பற்றி இரு இடங்களில் ட்திருமூலர், திருமந்திரத்தில் கூறியுள்ளார். பூணூலிம், குடுமியும் வேதாந்தத்தையும், ஞானத்தையும் உணர்த்தும் அடையாளங்களாக அந்தணர்களுக்கு உரியது என 'அந்தணர் ஒழுக்கம்' என்னும் பகுதியிலும், ஆறாம் தந்திரத்தில் 'திருநீறு' அதிகாரத்தில்,
'நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூலது வேதந்தம் நுண்சிகை ஞானமாம்'
எனவும் இதன் மகத்துவத்தைக் குறிப்பிடுகிறார்.
-- கேளூங்க சொல்கிறோம்! -- பகுதியில் , மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
-- தினமலர் ஆன்மிக மலர் .இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

No comments: