Wednesday, November 30, 2016

வேதம் -- ஜோதிடம்

வேதபுருஷனின் ஆறு அங்கங்கள்:
1. சிக்ஷா என்பது நாசி என்றும்
2. கல்பம் என்பது கரங்கள் என்றும்
3. வியாகரணம் என்பது வாக்கு என்றும்
4. நிருத்தம் என்பது செவி என்றும்
5. சந்தஸ் என்பது பாதம் என்றும்
6. ஜோதிடம் என்பது நேத்திரம் ( கண்கள் ) என்றும் கூறப்படுகின்றது.
வேதத்தின் கண்கள் என்று கூறப்படுகின்ற ஜோதிடம்,
ரிக்வேதத்தில் 'ஆர்ச்ச' என்றும்
யஜுர் வேதத்தில் 'ஜ்யோதிஷம்' என்றும்
அதர்வண வேதத்தில் 'ஆதர்வண' என்றும் குறிப்பிடப்படுகிறது.
சாம வேதத்தின் 'ஜோதிடம்' இப்போது நம்மிடம் இல்லை.
ஜோதிட சாஸ்திரத்தை சிவபெருமானாகப்பட்டவர் உமா மகேஸ்வரியாகிய பார்வதிக்கு உபதேசித்தும், பார்வதி சுப்ரமண்ய ஸ்வாமிக்கும், சுரமண்யர் குரு முனிக்கும், அவர் தனது சிஷ்யர்களுக்கும் உரைத்தார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் ஜோதிடக்கலையானது
1. அத்திரி 2. ஆங்கிரஸ 3. வசிஷ்டர் 4. நாரதர் 5. கஸ்யபர் 6. அகஸ்தியர் 7. போகர் 8. புலிப்பாணி 9. வியாசர் 10 . பராசரர்
11. ரோமர் 12. கர்கர் 13. புகர் 14. சௌனகர் 15. கௌசிகர் 16. ஜனகர் 17. நந்தி 18. ஜெயமுனி ஆகிய 18 சிதர்களாலும் வழிவழியே வளர்க்கப்பட்டுவந்தது.
-- ( ஜோதிடம் தெளிவோம் ) பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று . ஞாயிறு , நவம்பர் 16, 2014.

No comments: