Friday, November 18, 2016

ராக்கெட்டும் பஞ்சாங்கமும்

அமெரிக்காவில் விஞ்ஞான ஆய்வு மையத்தில் இருந்து கொண்டு ராக்கெட் ஏவுபவன்கூட நம்மூர் பஞ்சாங்கக் கணக்குகளைத்தான் பின்பற்றுகிறான். பூமியில் இருக்கும் வரைதான் இரவு, பகல் எல்லாம். பூமியில் தான் கடிகாரங்களுக்கு வேலை இருக்கும். வான மண்டலத்தைக் கடந்துவிட்டால் இரவேது பகலேது? அந்த நிலையில் பூமியிலிருந்து ராக்கெட் எந்த இடத்தில் எந்த டிகிரியில் இருக்கிறது ... ராக்கெட்டிலிருந்து எந்தெந்தக் கிரகம் எந்தெந்த டிகிரியில் இருக்கின்றன என்ற கணக்குதான் நேரம் அறிய துணை செய்யும். விஞ்ஞான பூர்வமான இந்த விஷயங்களை நம்மூர் ஜோதிடக்காரன் காவிரிக் கரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு சோழிகளை உருட்டியே சொல்லி விடுகிறான் என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம்.
-- தினமலர் .பக்திமலர்.13-11-2014.

No comments: