Sunday, November 13, 2016

நேரு.

சீரிய நெற்றி எங்கே சிவந்த நல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே குறுநகை போனதெங்கே
நேரிய பார்வை எங்கே நிமிர்ந்தநன் நடைதானங்கே
நிலமெலாம் வணங்கும் தோற்றம் நெருப்பினில் வீழ்ந்ததிங்கே
ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்?
எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட.
-- கவிஞர் கண்ணதாசன், நேரு இறந்தபோது எழுதிய இரங்கற்பாவிலிருந்து...
-- கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 14, 2014.

No comments: