Thursday, November 10, 2016

தகவல் பலகை.

* ஆப்பிள் பழம் ரோஜாப்பூ குடும்பத்தைச் சேர்ந்தது என்றால், நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
* நிலவாழ் உயிரினங்களில் யானை, காண்டாமிருகத்திற்கு அடுத்த 3 வது பெரிய உயிரினம் நீர்யானை. குதிக்கத் தெரியாத
நீர்யானைகளால் நிலத்தில் மணிக்கு 30 கிமீ வேகத்தில் ஓடவும், நீரில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் நீந்தவும் முடியும்.
* இயற்கையாக கிடைக்கும் வேர், பூ, இலை, காய்களை பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவத்திற்கு அரோமா தெரபி
என்று பெயர் .
* சீனாவில் வெள்ளையும், துரிக்கியில் நீலமும், எகிப்தில் மஞ்சளும், நம் நாட்டில் கறுப்பும் துக்கத்தை குறிக்கும் நிறங்களாக
கடைபிடிக்கப்படுகிறது.
* உலகிலேயே இலங்கையில் உள்ள கண்டி கதிர்காமம் முருகன் பெயருக்கு மட்டுமே காசோலை எழுதி உண்டியலில்
செலுத்தினால் அது செல்லுபடியாகும்.
* வலி நிவாரணியாக பயன்படுத்தும் அமிர்தாஞ்சன் தைலம், ஆந்திராவைச் சேர்ந்த காசிநாத்துனி நாகேஸ்வரராவ் என்பவரால்
1894ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
-- தினமலர் நாளிதழ்களிலிருந்து.

No comments: