Tuesday, November 1, 2016

'எனக்கு எதுக்குடா வாங்கின?"

"காதலி, மனைவி, அம்மா -- என்ன வித்தியசம்?"
" 'எனக்கு என்ன வாங்கிக் குடுப்ப?" -- காதலி.
'எனக்கு என்னதான வாங்கிக் குடுத்துக் கிழிச்சீங்க' -- மனைவி.
"எனக்கு எதுக்குடா வாங்கின?" -- அம்மா.
-- ஆ.சிவமணி, பிளியம்பட்டி.
"20 ஆயிரம் கோடி ஏமற்றிய 'சகாரா'வின் சட்ட ஆலோசகர் ரவி சங்கர் பிரசாத். நீதித் துறைக்கே அமைச்சராகிவிட்டாரே?"
" 'சிலம்பை உடைத்து
என்ன பயன்?
அரியணையிலும் அதே கொல்லன்'
என்ற ஈரோடு தமிழன்பனின் இந்த ஹைக்கூ , உங்களுக்கே உங்களுக்காக!"
-- தாமு,தஞ்சாவூர்.
"சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது என்றால் என்ன?"
" 'வீரன் ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான்' என்பதை கலைஞர் இப்படிச் சொன்னார்: 'வீரன் சாவதே இல்லை;
கோழை வாழ்வதே இல்லை'!"
-- அ.யாழினி பர்வதம், சென்னை -78.
--( நானே கேள்வி... நானே பதில்! பகுதியில்... )
-- ஆனந்த விகடன். 02-07-2014.

No comments: