Sunday, October 2, 2016

கழுகுகள்

இன்று சர்வதேச கழுகுகள் தினம்!
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் வனப்பகுதியில் 1,200-க்கும் மேற்பட்ட அரியவகை பறவையினங்கள் உள்ளன. இவற்றில் பிணம் தின்னி கழுகுகள் மிக முக்கியமானது. இந்தியாவில் ஒன்பது வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன.
தமிழகத்தில் வெண் முதுகு பிணம் தின்னி, இந்தியன் பிணம் தின்னி, செந்தனை பிணம் தின்னி, எகிப்திய பிணம் தின்னி ஆகிய நான்கு வகை பறவைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் தற்போது எகிப்திய பிணம் தின்னியை தவிர மற்ற இனங்கள் அழிந்து வருகின்றன. தமிழகத்தில் பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 250 முதல் 300 வரை மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
'டைகுனோபினாக்' எனும் கால்நடை மருந்துதான், பிணம் தின்னி கழுகுகள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
'டைகுனோபினாக்' மருந்தை சாப்பிட்ட கால்நடைகள், இறந்தபின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்த கால்நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடும். இந்த மருந்து 1990-ம் ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனவே, அந்த ஆண்டு முதல் இந்த கழுகுகள் இனம் அழியத் தொடங்கியது.
-- ஒய்.ஆண்டனி செல்வராஜ். ( மாநிலம் ).
-- 'தி இந்து' நாளிதழ். சனி, செப்டம்பர் 6, 2014.

No comments: