Wednesday, October 19, 2016

ஜன்னல் இல்லாத விமானம்

உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்.
பயணிகள் வான்வெளியை ரசிக்க முடியும்.
விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக்கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முதலாக ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விமானம், அதில் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுமிட்டுள்ளார்கள். இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமாவதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு ( ஓஎல்இடி) தொழில்நுட்பத்தின் மூலம் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் இன்டர்நெட்டில் உலவிக்கொண்டே வான்வெளியில் என்ன நடக்கிறது என்பதை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும்.
மேலும் இந்த ஸ்மார்ட்ஸ்கிரீன் ஆன், ஆப் வசதி கொண்டதாக இருக்கும். இதன்மூலம் விரும்பும்போது வான்வெளியைப் பார்க்கவும், விரும்பாதபோது மூடிவிடவும் முடியும். இந்த விமானம் விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எனினும் வர்த்தக ரீதியாக செயல்பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
-- தி.கார்டியன். ( சர்வதேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 28, 2014.

No comments: