Saturday, October 1, 2016

ஐம்புலன்கள்

அஞ்சும் அடக்குஅடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே
( திருமந்திரம் - 2033 )
ஐம்புலன்களை அடக்க நினப்பவர்களை திருமூலர் இப்படி விமர்சிக்கிறார். தன்னுடைய தமிழில் அவர் கூறியதை நம்முடைய தமிழில் பார்ப்போம்.
ஐம்புலன்களை அடக்கு என்பவர்கள் அறிவில்லாதவர்கள்.
ஐம்புலன்களை அடக்கியவர்கள் தேவலோகத்தில் கூட இல்லை.
ஐம்புலன்களை அடக்கினால் மதிகெட்டு போகும்.
அவற்றை அடக்காது நெறிப்படுத்தும் அறிவை அறிந்தேன்.
-- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. ( Business Line பக்கம் ) வணிகம்.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, செப்டம்பர் 6, 2014.

No comments: