Monday, September 5, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. தினைப்புனத்தில் முருகன், வேங்கை மரமாக மாறி நின்றார்.
2. வயிற்று நோய் தீர ஆதிசங்கரர் முருகன் மீது பாடியது, சுப்ரமணிய புஜங்கம்.
3. திருப்பதியில் கோயிலுக்கு அருகிலுள்ள தீர்த்தம், சுவாமி புஷ்கரணி.
4. சிவாலயத்தில் தியானத்தில் லயித்திருப்பவர், சண்டிகேஸ்வரர்.
5. வள்ளிமலை சுவாமிக்கு அருள் புரிந்தவர், திருத்தணி முருகன்.
6. திருநீற்றுப்பதிகம் பாடப்பட்ட சிவத்தலம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்.
7. சங்கரநாராயணர் கோலத்தைப் பாடிய ஆழ்வார், பேயாழ்வார்.
8. திருப்பதி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ள காப்பியம், சிலப்பதிகாரம்.
9. தொண்டைமானுக்கு சக்ராயுதம் கொடுத்து உதவியவர், திருப்பதி ஏழுமலயான்.
10.சூரியனின் மனைவியர், உஷா, பிரத்யுஷா.
--அர்ச்சனைப்பூக்கள். பக்திமாலை.
-- தினமலர் ஆன்மிக மலர். சென்னை பதிப்பு . ஜூன் 24, 2014.

No comments: