Saturday, September 24, 2016

"மனப்பாடச் சக்தி"

"மனப்பாடச் சக்தியும் ஒரு திறமைதானே...ஏன் அதைப் பற்றி துச்சமாக விவாதிக்கிறீர்கள்? செயல்வழிக் கல்விக்கும், மனப்பாடக் கல்விக்கும் அப்படியென்ன வித்தியாசம்?"
"மருத்துவக் கல்லூரி வகுப்பில், பேராசிரியர் ஒரு மாணவரிடம் ஒரு நோயாளியின் நோயையும் அவரது மோசமான நிலையையும் விளக்கிவிட்டு, 'இந்த நிலையில் இந்த மருந்து என்ன அளவில் கொடுக்கப்பட வேண்டும்/' என்று கேட்டார். 'உடல் எடை , வயது ஆகியவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஐந்து கிராம் அளவில்' என்று கூறிய மாணவர், சிறிது நேரம் யோசித்த பிறகு, 'நான் என் பதிலை மாற்றிக்கொள்ள விருமுகிறேன். அனுமதிப்பீர்களா>' என்று கேட்டார். அதற்கு பேராசிரியர், 'கவலைப் படாதே ... நோயாளி இறந்து 30 நொடிகள் ஆகிவிட்டன' என்றார். இதுதான் நீங்கள் கேட்ட வித்தியாசம் !"
-- கே.சரஸ்வதி, ஈரோடு.
"இயற்கை மீது நமக்கு பரிவு உண்டா?"
"எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வருகிறதே...
'காடுகளை
வேட்டையாடும்
ஒரே மிருகம்
மனிதன்'!"
-- முத்தூஸ், தொண்டி. ( நானே கேள்வி... நானே பதில்! ) தொடர்.
-- ஆனந்த விகடன், 25-6-2014.

No comments: