Tuesday, August 2, 2016

வாத்தியாரு பாட்டு !

பல்லாயிரம் உயிரினங்களில்
பேராசை பிடித்தவன் மனிதன் !

எல்லாம் தெரியும் என்கின்ற
இறுமாப்புக் கொண்டவன் மனிதன் !

தனக்குத்தான் பூமி என்ற
தன்னலமிக்கவன் மனிதன் !

தன்சுக வாழ்க்கைக்காகத்
தரணியைச் சிதைப்பவன் மனிதன் !

அடடா !  தன் தலையில் தானே
மண்ணைப் போடுகிறான் மனிதன் !
-- பச்சை பூமி. மாத இதழ்.  ஏப்ரல் - 2014.
-- இதழ் உதவி :  கனக.கண்ணன்,  செல்லூர். 

No comments: