Sunday, August 14, 2016

தெரியுமா?

*   சீனாவைச் சுற்றி மொத்தம் 11 நாடுகள் உள்ளன.
*   பிறந்த குழந்தை அழுதால் கண்ணீர் வராது.  ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்பட குறைந்தது 15 நாட்கள் ஆகும்.
*   காந்திஜி முதன் முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.
*   கைரேகையை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்.
*   ஜூடோ கலையை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் ஜப்பானியர்கள்.
*   சூரியனை மிக வேகமாக ( மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.
*   காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் பழக்கம் நாய்க்கு உண்டு.
*   மனிதன் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டும்.
*   இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனின் சொந்த ஊர் திருச்சி.  அங்குள்ள திருவானைக்காவல் என்ற ஊரில்
     பிறந்தார்.
*   உலகிலேயே மிகச் சிறிய கண்டம் ஆஸ்திரேலியா.
-- மாயாபஜார். இனைப்பு.
--  'தி இந்து' நாளிதழ். புதன், ஜூலை 16,  2014.                            17.7.14.

No comments: