Thursday, July 7, 2016

மலட்டுத் தன்மை

சோப்பு, பற்பசை, சன்ஸ்கிரீன் கிரீம்களில் உள்ள ரசாயனங்கள் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.
* ஆய்வில் அதிர்ச்சித் தகவல் *
     96 சேர்மங்களை ஆய்வு செய்ததில், வெயிலிலிருந்து சருமங்களைப் பாதுகாப்பதற்காக சன்ஸ்கிரீன் கிரீம்களில் பயன்படுத்தப்படும் '4- மீதைல்பென்ஸில்டேன் கேம்பர்' ( 4-எம்பிசி ), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான 'டிரைகுளோசன்' ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் விந்தணுக்களைப் பாதிக்கின்றன.
     இதற்கு முந்தைய ஆய்வுகளில், இந்த ரசாயனங்கள் விந்தணுக்களைப் பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு ஆய்வுமுறைகள் இல்லை.  தற்போது புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
     நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிப்பவை எனக் கூறப்படும் ரசாயனங்களை சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  மனிதனின் அன்றாடம் பயன்பாட்டிலுள்ள உணவு, துணிகள், சுகாதாரப் பொருட்கள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றில் 'நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிப்பவை' எனக் கருதப்படும் ரசாயனங்கள் உள்ளன.
     சிலவகை சோப்புகள், பற்பசைகள், சன்ஸ்கிரீன் கிரீம்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் சிலவகை ரசாயனங்கள், விந்தணுக்களின் கால்சியம் அளவை அதிகப்படுத்துகின்றன.  அவற்ரின் நீந்தும் தனமையில் மாற்றத்தை ஏற்படுதுவதுடன், கருமுட்டையைப் பாதுகாக்கும் கவசத்தைத் துளைத்து உள் நுழையும் திறனையும் குறைக்கின்றன.
-- ஏ.எப்.பி.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், மே 14.  2014.   

No comments: