Saturday, July 2, 2016

திருவள்ளுவர் தினம்!

  வைகாசி அனுஷம்தான் திருவள்ளுவர் தினம் !
வரலாற்று ஆதாரங்களுடன் அறிஞர்கள் புதுத் தகவல்.
பெரியார், அண்ணாதுரை வழியை பின்பற்ற கோரிக்கை.
     'வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்'  -  இந்த தலைப்புக்குச் சொந்தக்காரர் இலங்கையைச் சேர்ந்த வித்துவான் பண்டிதர் கா.பொ.ரத்தினம் எம் ஏ, பி.ஓ.எல்.  23.11. 1952ல் அவரால் நிறுவப்பட்ட தமிழ்மறைக் கழகம் சார்பில் அரும்பாடுபட்டு வைகாசி அனுட ( அனுஷ ) நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டி அதில் வெற்றியும் பெற்றார்.
     சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயில் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.  இந்த கோயிலில், திருவள்ளுவர் அவதார நாளாக  வைகாசி அனுடமும் - அவர் அடைந்து போன நாளாக மாசி உத்தரமும் கடைபிடிக்கப்படுகின்றன.
-- தினமலர். வியாழன், மே 15, 2014.    

No comments: