Monday, July 18, 2016

தெரியுமா?

*  ஜூலை 28, 1914 தொடங்கி, நவம்பர் 11, 1918 வரை முதல் உலகப் போர் நீடித்த மொத்த நாட்களின் எண்ணிக்கை 1,568.
*  ஒருவர் தண்ணீர் குடிக்காமல், உணவு சாப்பிடாமல் 15 நாட்கள் வரை உயிர் வாழலாம்.  சுவாசிக்க ஆக்ஸிஜன் மட்டும்
    இருந்தால் போதும்.  ஆனால், சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
*  முதல் உலகப்போரின் திருப்புமுனையே மார்ன் நதிக்கரையில் நடந்த சண்டைதான்.  மேற்கு ஐரோப்பாவின்
    பாதுகாவலராகவும், படிப்படியாக உலகின் ஒற்றை வல்லரசாகவும் அமெரிக்கா உருவானதன் தொடக்கமே அந்த வெற்றிதான்.
*  முதல் உலகப்போரில், பிரிட்டன் படையுடன் இணைந்து போரிட்டுப் பலியான இந்திய வீரர்களின் எண்ணிக்கை 74,191.
*  நோயால் பாதித்த பெண் யானை, சில நேரங்களில் தன் குட்டியும் நோயால் பாதிக்கக் கூடாது என்பதற்காக அதை தனியாக
    விட்டு பிரிந்துவிடும்.  சில பெண் யானை, மற்றொரு யானை கூட்டத்தில் சேர்வதற்காக, தன் குட்டியை பிரிந்து செல்லவும்
    வாய்ப்புள்ளது.
*  இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே காணப்படும் விலங்கு வங்கப்புலி.  இது 1972-ல் தேசிய விலங்காக தேர்வு
   செய்யப்பட்டது
-  'தி இந்து' நாளிதழ்.  புதன் ஜூலை 2, 2014.
-- தினமலர். செவ்வாய், 3-6-2014. 

No comments: