Saturday, July 16, 2016

அர்ச்சனை செய்யும்போது...

  சுவாமிக்குப் பூக்களால் அர்ச்சனை செய்யும்போது விதவிதமான மலர்களை இறைவனுடைய கழுத்ல் ஆரம்பித்து திருவடி வரை எட்டு இடங்களில் சாத்த வேண்டும்.  இதை 'அங்க பூஜை' என்பார்கள்.  சிவபெருமானுடைய கழுத்தில் வில்வத்தையும், திருமுகத்தில் தாமரை மலரையும், திருமுடியில் எருக்கம்பூவையும்,  மார்பில் நந்தியாவட்டையும், கொப்பூழில் ( தொப்புளில் ) பாதிரி மலரையும்,  இடுப்பில் அலரி மலரையும், முழ்ந்தாளில் செண்பக மலரையும், திருவடிகளில் நீல மலரையும் சமர்ப்பிக்க வேண்டும்.  மேற்படி மலர்வகைகளைச் சேகரிக்க முடியாத பட்சத்தில் ஒரே வித மலராக இருந்தாலும்... இந்த எட்டு இடங்களிலும் சமர்ப்பிக்து வணங்கலாம்.
--  தினமலர் பக்திமலர்.  மே 22. 2014.  

No comments: