Friday, July 15, 2016

வெந்நீரில் குளிக்காதீர் !

  அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு முதலான நாட்களில் வெந்நீரில் குளிக்கக்கூடாது.  குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.  பழங்காலத்தில் நீர் நிலைகள், ஆறு, குளம், கால்வாய், கடலில் குளிப்பார்கள்.
      பவுர்ணமி - அமாவாசை நாட்களில் மேற்படி திதி இருக்கும்போது அதிகாலையில் புண்ணிய தீர்த்தங்களில் குளிக்க வேண்டும்.  சமுத்திர ஸ்நானம் மிகவும் விசேஷம்.
      பவுர்ணமி என்பது சந்திரன் சூரியனுக்கு நேர் எதிரில் வெகு தொலைவில் இருக்கும் நாள்.  அமாவாசை மிக அருகில் 12 டிகிரியில் இருக்கும் நாள்.  சூரிய சந்திர இயக்கங்கள் பூமியில் பிரதிபலிக்கும்.  பூமிக்கு அடியில் உள்ள காஸ்மிக் கதிர் இயக்க மாறுதல்கள் ஏற்படும்.  இயற்கையின் சீற்றம் புலப்படும்.
     இந்நாட்களில் இயற்கையான நீர் நிலைகளில் குளிக்க வேண்டும்.  வெந்நீரில் குளிக்க வேண்டாம் என்கிறார்கள்.
--   தினமலர் பக்திமலர்.  மே 22. 2014.   

No comments: