Thursday, July 14, 2016

மணப்பலகை ஏன்?

 சாப்பிடும் போதும், ஜபம் செய்யும் போதும் மரப்பலகை மீது அமர வேண்டும்.  காய்ந்த தர்ப்பப் புல்லால் உருவாக்கப்பட்ட தர்ப்பாசனதில் அமர்வதும் உண்டு.  சிலர் புலித்தோல், மான்தோல் முதலானவற்றில் அமர்ந்து ஜபம் செய்வர்.
     மின்சாரம் பாய்வதை 'ஷாக்' என்கிறோம்.  ஷாக் அடிக்காமல் இருக்க கைகளுக்கு உறை அணிகிறோம்.  காய்ந்த மரப்பலகை மீது நிற்கிறோம்.  இவை தடுப்புக்கள்.  மின் சக்தியைக் கடத்தாத பொருள்கள் எனப்படுகிறது.  சாப்பிடும் போதும், ஜபம் செய்யும் போதும் ஆற்றல் கிடைக்கிறது.  ஜபிக்கும் போது ஆன்மாவுக்கும் புதிய சக்தி கிடைக்கிறது.  இந்த சக்தி பூமியில் இறங்கிவிடாமல் இருக்கவே - ஆற்றல்களை ஊடுருவாமல் தடுக்கும் சக்திப் படைத்த மணைப்பலகை மீது அமர வேண்டும்.
--  தினமலர் பக்திமலர்.  மே 22. 2014.  

No comments: