Wednesday, July 13, 2016

ஐந்து முக கங்கைகள்.

  சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு.  ஒவ்வொரு திசை நோக்கி ஒவ்வொரு முகம் இருக்கும்.  ஐந்தாவது முகம் நடுவில் மேல் நோக்கி இருக்கும்.  இந்த ஐந்து முகங்களை உடைய லிங்கத்தை 'பஞ்சமுக லிங்கம்' என்பார்கள்.  ஒவ்வொரு முகத்தில் இருந்தும் கங்கை உற்பத்தியானது.  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டென்கிறது சிவபுராணம்.
     அந்தக் கங்கைகளை 'சிவஅமுதசாகரம்' என்றும் சொல்கிறது.  கிழக்கு முகதில் இருந்து ரத்தினகங்கையும், மேற்கு முகதில் இருந்து தேவகங்கையும், வடக்கு  முகதில் இருந்து கைலாய கங்கையும், தெற்கு  முகதில் இருந்து உக்கிர கங்கையும், நடு  முகதில் இருந்து பிரம்ம கங்கையும் உற்பத்தியாயின என்பது புராணம்.
-- பக்தி துணுக்குகள்.
-- தினமலர் பக்திமலர்.  மே 22. 2014.  

No comments: