Tuesday, July 12, 2016

பஜகோவிந்தம்.

    ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம்., உலக மாயைகளில் இருந்து விடுபட்டு ஆத்ம தத்துவத்தை உனர்த்தும் ஞானப்பொக்கிஷம்.  இதன் 32 பாடல்களில் 5-வது பாடல் :
    'யாவத்வித்தோபார்ஜன ஸக்த
     ஸ்தாவந்நிஜ பருவாரோ ரக்த :
     பச்சாஜ்ஜீவதி ஜர்ஜர தேஹே
     வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே'
இதற்கு வழங்கியுள்ள உரை :  'ஒருவன் பொருள் ஈட்டும் வரையில் அவனது சுற்றத்தார் மிகுந்த அன்பு காட்டுவார்கள்.  ஆனால், உடல் தளர்ந்து, சம்பாதிக்க முடியாமல் போகும்பொழுது, வீட்டில் உள்ளவர்கள் கூட அவனிடம் பேசமாட்டார்கள்'.
-- க.ராஜகோபாலன், தனது ' ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம்' என்ற நூலில்.
-- தினமலர் நாளிதழ். 22-5-2014.   

No comments: