Friday, July 1, 2016

மூளைகாரன்பேட்டை

நான் யார் ?
1. எட்டு எழுத்துகள் கொண்ட நான் ஒரு ராகம்.  என் பெயரில் திரப்படம்  ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
2.  எனது 1,2,3,8 எழுத்துகளை இணைத்தால், தமிழ் வளர்த்த அமைப்பு.
3.  எனது 4,3,8 எழுத்துகளை இணைத்தால், கல்யாணி, தோடி, காம்போதி  போன்ற வகை.
4.  எனது 3,5,8 எழுத்துகளை இணைத்தால், அது நெஞ்சில்  கட்டிக்கொள்ளும் சளியைக் குறிக்கும்.
5.  எனது கடைசி மூன்று எழுத்துகள் காயத்தைக் குறிக்கும்.
6.  எனது 5,7,8 எழுத்துகள் காசு என்பதைக் குறிக்கும்.
7.  எனது 3,6,8 எழுத்துகளை இணைத்தால்,கையைக் குறிக்கும்.
8.  எனது 3,7,8 எழுத்துகளை இணைத்தால்,கிடைப்பது மிகச் சிறிய   அளவிலான நேரம்.
9.  என் முதல் நான்கு எழுத்துகள் சிவபெருமானை அழைப்பதாகும்.
     நான் யார் தெரியுமா?
    விடை : 1.சங்கராபரணம்.  2.சங்கம்.  3.ராகம்.  4.கபம்.  5.ரணம்.
                 6.பணம்.  7. கரம்.  8.கணம்.  9.சங்கரா.
 -- ஜி.எஸ்.எஸ்.  ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ்.ஞாயிறு, மே 11, 2014.  

No comments: