Tuesday, June 7, 2016

காத்திருப்பு !

அமாவாசைக்கு
இறந்து விடுவாள் என
எதிர்பார்த்த அனைவரையும்
ஏமாற்றி காக்க வைத்து
தாமதமாய் இறந்தாள் பாட்டி.

நெய் பந்தம் பிடிக்கும்
இரு பேரன்களும்
மும்பையிலிருந்து வரும்வரை
குளிரூட்டப்பட்ட பெட்டியில்
காத்திருக்கிறாள்

ஆரம், கோடி போர்த்தப்பட்ட
பூத உடல்
அமரர் ஊர்தியில் புறப்பட்டு
போக்குவரத்து நெரிசல்
ரயில்வே லெவல் கிராசிங்கை
சிரமப்பட்டு கடந்தாள்

இறுதியில்
மின்மயானம் சென்றவள்
அங்கும் எரியூட்ட காத்திருக்கிறாள்
அறிவிக்கப்படாத மின்வெட்டினால்...
-- இரா.கமலா, சித்தோடு.
-- தினமலர். இணைப்பு. பெண்கள்மலர். மே 3, 2014.   

No comments: