Friday, June 3, 2016

ஆன்மிகம்.

*  சாரங்கம் என்பது மகாவிஷ்ணுவின் வில்லின் பெயர்.
*  நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்பது சிவவாக்கியர் பாடல்.
*  நைமிசாரண்யம், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
*  விவேக சூடாமணி, ஆதிசங்கரர் இயற்றிய நூல்.
*  அருணகிரிநாதர் இயற்றிய நூல் கந்தர் அலங்காரம்.
*  மாயை என்பது அத்வைத தத்துவத்தின் முக்கியமான கருத்தாக்கம்.
*  ஸ்ரீராமானுஜர் கீதைக்கு எழுதிய உரையின் பெயர் கீதா பாஷ்யம்.
*  தேவதத்தம் என்பது அர்ஜுனனின் சங்கின் பெயர்.
*  அயமாத்மா பிரம்மம் என்பது வேதமகா வாக்கியங்களில் ஒன்று.
*  யமம், நியமம் என்பவை அஷ்டாங்க யோகம் எனப்படும் எட்டு அங்கங்கள் கொண்ட யோக சாஸ்திரத்தின் முதல் இரு
   அங்கங்கள்.
-- ஆனந்த ஜோதி.
--   'தி இந்து' நாளிதழ். வியாழன், மே  1, 2014.                          

No comments: