Saturday, June 25, 2016

முதிர்கன்னி !

கன்னி கழியாமல்
மனைவியே ஆகாமல்
தாயும் ஆகாமல்
தாலாட்டும் பாடாமல்
மாமியார் ஆகாமல்
பாட்டியாகி விட்டேன் !
வயது முதிர்ந்த ஒரே
காரணத்திற்காக !
-- ஆர்.ஜனனி, ஏரகுடி.
பூ!
விற்பதற்குள்
வாடிப் போய்
விட்டது பூ
விற்பவளின் முகம்.

குடி !
கடுகையும்
மிளகையும் -
பீரோவில் வைத்துவிட்டு
காசையும்
நகையையும்
கடுகு டப்பாவில் வைத்தாள்
திருடனுக்கு பயந்து அல்ல
குடிகார கணவனுக்கு பயந்து !
-- தேவிகோகிலன், ஜோலார்பேட்டை.
-- தினமலர். பெண்கள்மலர் இணைப்பு.  மே 10, 2014.  

No comments: