Thursday, June 23, 2016

ஆன்மிகம்

*    பிருஹன்னளை என்பது தலைமறைவாக இருந்த காலத்தில் பெண் உருவில் இருந்த அர்ஜுனனின் பெயர்.
*    ராமாயணத்தில் வரும் மந்தாரையை கூனி என்றும் சொல்வார்கள்.
*    வானப்பிரஸ்தம் என்பது வாழ்வின் நான்கு கட்டங்களில் மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ளது.  குடும்ப வாழ்க்கையின் பந்தங்க்ளிலிருந்து விலகி, ஒட்டாமல் வாழம் கட்டம்.
*   சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்விகம் நிறைந்த கல் ஆகும்.  இது  நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்னங்களில்
    கிடைக்கிறது.
*   தாயுமானவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார்.
*   கந்தர் அனுபூதியை எழுதியவர் அருணகிரிநாதர்.
*   அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும்போது பல்வேறு தெய்வங்கள் தோன்றின.  கற்பகவிருட்சம் போலக்   கேட்டதைத் தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது
    என்கிறது புராணம்.
*   விஷ்ணு வாமன அவதாரம் எடுத்தபோது தன் பாதங்களால் இந்த உலகை அளந்தார் என்கிறது தசாவதாரக் கதை.
*   பித்தா பிறைசூடி என்பது சுந்தரரின் பாசுரம்.
*   சமண மகரிஷி பிறந்த ஊர் மதுரையை அடுத்த திருச்சுழி.
-- ஆனந்த ஜோதி.
--  'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  மே 8,  2014.    

No comments: