Monday, May 9, 2016

கஞ்சா பயிரிடலாம்.

கஞ்சா பயிரிடலாம். விற்கலாம், புகைக்கலாம்.
உலகில் முதல்முறையாக,தென் அமெரிக்காவில் உருகுவே அரசு சட்டபூர்வ அனுமதி.
     உருகுவே நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் அரசு மருந்தகங்களில் மாதத்துக்கு 40 கிராம் கஞ்சாவை வாங்கிக்கொள்ளலாம்.  ஒவ்வொரு குடிமகனும் தனது வீட்டில் 6 கஞ்சா செடிகளை வளர்க்கலாம்.  15 முதல் 45 பேர் இணைந்து தனிச் சங்கம் தொடங்கி ஆண்டுக்கு 90 கஞ்சா செடிகள்வரை வளர்க்கலாம் என்று புதியசட்டம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
    சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சிகள், கஞ்சா பயன்பாட்டால் நாட்டு மக்களின்  ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டியுள்ளது.
     மறுபுறம், சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் மாண்டிவிடியோவில் பெருந்திரளான மக்கள் நாடாளுமன்றம் முன்பு குவிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ். வெள்ளி, டிசம்பர் 13, 2013. 

No comments: