Sunday, May 8, 2016

இருப்பதைக் கொடு!

  துறவி ஒருவர் தன் சீடர்களோடு புதிதாக ஒரு நகருக்கு வந்தார்.
     அங்கிருந்தவர்களுள் ஒரு சிலரைத் தவிர மற்றப் பலரும் அவரைக் கேலி செய்தனர்.
     ஆனால், துறவி எல்லோரையும் சமமாகவே,  "இறையருள் கிட்டட்டும்'' என வாழ்த்தினார்.
     சீடர்கள், "ஏளனம் செய்தவரையும் வாழ்த்துவது ஏன்?"  எனக் கேட்டனர்.
    "ஒவ்வொருவரும் அவரவரிடம் இருப்பதைத்தானே அடுத்தவர்க்குக் கொடுக்க முடியும்!" அமைதியாகச் சொன்னார் துறவி.
63வர் தெரு!
     பாளையங்கோட்டையில் 63 நாயன்மார்கள் பெயரிலும், பன்னிரு ஆழ்வார்கள் பெயரிலும் தெருக்கள் இருக்கின்றன.  இவை தவிர திருப்பாவை, திருவெம்பாவை, கம்பராமாயணம், திருக்குறள் பெயர்களிலும் தெருக்கள் உள்ளன.
இழக்கும் குணம்!
    "கோபப்படும் குணம் அவ்வளவு கொடியதா சுவாமி?"  சீடன் ஒருவன் குருவிடம் கேட்டான்.
    "ஆம்.  தற்பெருமைப்படுபவன், கடவுளை இழக்கிறான்.  பேராசைக்காரன் நிம்மதி இழக்கிறான்.  பொறாமைப்படுபவன் நண்பனை இழக்கிறான்.  ஆனால், கோபப்படுபவனோ தன்னையே இழக்கிறான்...!" சொன்னார் குரு.
--  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஜனவரி 1-15,  2014.  

No comments: