Saturday, May 7, 2016

மலர் மேல் மாருதி!


     வட அமெரிக்காவில், கலிபோர்னியாவில் லிவர்மோர் நகரில் சிவா - விஷ்ணு ஆலயத்தில் 14 அடி உயரமுள்ள அனுமன் தாமரை மலர்மீது கூப்பிய திருக்கரத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருவது எந்த அனுமன் கோயிலிலும் காண முடியாத சிறப்பம்சமாகும்.
முக்கோல அனுமன்!
     புராண காலத்திலும், வேதகாலத்திலும் மிகப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்ந்தது பங்கி எனப்படும் தலம்.  இது இன்றைக்கு கான்பூரிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  இங்குள்ள மிகப் புகழ்பெற்ற அனுமன் கோயிலில் காலையில் சூரிய ஒளியில் பார்க்கும்போது அனுமன் குழந்தையாகவும், மதிய நேரத்தில் இளம் வயதினராகவும், மாலை தரிசனத்தின்போது மகாபுருஷராக பெரியவராகவும் காட்சி தருகிறார்.  இது பக்தர்களுக்குத் தானாக ஏற்படும் பிரம்மையா, அல்லது அனுமனே நிகழ்த்தும் அற்புதமா என்பது யாரும் அறியா ரகசியமாக உள்ளது.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஜனவரி 1-15,  2014.                                     

No comments: