Friday, May 6, 2016

மழையே வந்திடு !

 ( குழந்தைப் பாடல் ).
மழையே மழையே வந்திடு
     மண்ணில் வந்து விழுந்திடு !
உழவே செழிக்க வந்திடு
     உயிரைக் காக்க வந்திடு !

பச்சை கொஞ்சி வயலிலே
     பயிர்கள் செழிக்க வந்திடு !
இச்சை கொண்டு மக்களே
     இனிதே வாழச் செய்திடு !

தாகம் தீர்க்க வந்திடு
     தாயாய் வந்து நின்றிடு !
மேகம் திரண்டு வானிலே
     மின்னல் இடியுடன் வந்திடு !

கானல் நீக்க வந்திடு
     கங்கை பொன்னியில் வந்திடு !
வேனல் போக்க இன்பமே
     வீற்றி ருக்க வந்திடு !

காடு செழிக்க வந்திடு
     கனிகள் கொடுக்க வந்திடு !
நாடு செழிக்க வைத்திடு
     நல்ல மழையே வந்திடு !
-- செ.சு.மலரடியான், கள்ளக்குறிச்சி.
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 23, 2014. 

No comments: