Monday, May 23, 2016

ராட்ஷச விமானம்


     உலகின் மிகப்பெரிய போக்குவரத்து விமானம் என்ற பெருமை இந்த நிமிடம் வரை ஏ380க்கு உரியதாக இருக்கிறது.  ஏர்பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இது நான்கு ஜெட்  இன்சிங்களைக் கொண்டது.  இரட்டை முழு அடுக்கு கொண்ட இதில் ஒரே நேரத்தில் 550 முதல் அதிகபட்சமக 850 பயணிகள் வரை பறக்க முடியும்.
     இதற்கு அடுத்த அளவு விமானத்தைவிட இது 40 சதவீதம் அளவு இடவசதியிலும், வெளித்தோற்றத்திலும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நம்பர் ஒன் விமானத்தை மிஞ்சும் வகையில் அடுத்த தலைமுறை விமானம் மிகப் பிரமாண்டமானதாக தயாரிக்கப்பட இருக்கிறது.  இது திமிங்கிலம் வடிவில் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
     பெயர் சூட்டப்படாத இந்த புதிய விமானத்தில் லாங் டேக்ஆப்புக்கு பதிலாக வெர்டிகல் டேக் ஆப் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் இன்ஜின்கள் பேட்டரி டர்பைன் மூலம் இயங்கும்.  சிறிதும் உதறல் இல்லாத மென்மையான பயணம் கிடைக்கும் என்கின்றனர் இதை வடிவமைத்த விஞ்ஞானிகள்.  உலகின் அத்தனை பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாக அமையும் இந்த புதிய ரக விமானத்தில் ஆயிரத்து 600 பேர் வரை ஒரே நேரத்தில் பயணம் செய்யமுடியுமாம்.
--  சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 27-4-2014.                                                            

No comments: