Thursday, May 19, 2016

உற்சாகம், புத்துணர்ச்சி

  பள்ளி மாணவர்கள் வகுப்புகளில் சோர்வடைவதைத் தடுத்து, உற்சாகமும், புத்துணர்ச்சியும் பெற, சீனக் கல்வியாளர்கள் ஒரு திட்டம் மேற்கொண்டனர்.  எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில், தூங்கும் வகுப்பையும் சேர்க்கும்படி பரிந்துரைத்தனர்.  இதன்படி, உள்ளா  இடைவேளைக்குப் பிறகு, சுமார் 20 நிமிடங்கள் அந்த மாணவர்கள் உறங்க வைக்கப்பட்டனர்.  இது கைமேல் பலன் தந்தது.  இப்போட்து, மேல் வகுப்புகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த, சீனக் கல்வித் துறை பரிசீலித்துவருகிறது.  --  இனி, வகுப்பில் 'ஒழுங்கா தூங்கச் சொல்றப்ப, யாருடா பாடம் படிச்சுகிட்டு இருக்கிறது?' என்ற டயலாக் கேட்குமோ!
-- பெண்டிரைவ்.
-- சுட்டி விகடன்.  28-02-2014.
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.    

No comments: